Friday 10 September 2010

மலைப்பாம்புகளை பிடிப்பதற்காக உயிரை பணயம்வைக்கும் ஆபிரிக்க பழங்குடிகள்

ஆபிரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலைப்பாம்புகளை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேட்டையாடும் மனிதர்களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றிகொள்ளும் என்பது உண்மையே.
இந்த பாம்புகள் தான் உலகிலே மிக நீளமான மலைபாம்புகள் ஆகும். இவற்றின் கூரிய பற்களும் சர்வ சாதாரணமாக எந்த ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டையாடும் முறையே வித்யாசமாக இருக்கிறது. மலைப்பாம்பு பிடிக்கும் முறை மிகவும் எளிதானது தான்.
மலைப்பாம்பு இருக்கும் வளையினை கண்டிபிடித்தவுடன் கையில் ஒரு சிறிய தோலை சுற்றிக்கொண்டு சின்ன தீ பந்தத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் அந்த வளையினுள் செல்லுவான் முட்டையிட்டு அடைகாக்கும் மலைப்பாம்பு எப்பொழுதும் மிக கோபமாகவே இருக்கும். திறமையான மனிதன் மிக வேகமாக வெளியே வந்துவிடுவான். தவறினால் மனிதனின் தலை பாம்பின் வாயினுள் தான்.
ஆனால் அவர்களும் புத்திசாலியே, தோல் சுற்றபட்ட கையால் மெதுவாக பாம்பின் முன் ஆட்டுவார்கள் ஒரு வேளை பாம்பு இவர்களை கவ்வி விட்டால் கையால் பாம்பின் நுரையீரல் இருக்கும் பகுதியை கெட்டியாக பிடித்து அதனை சம்மாளித்துவிடுவார்கள். கையில் இருக்கும் சிறிய தீ பந்தம் பாம்புகள் முகத்தினை நோக்கி வராதவாறு முகத்தின் முன் பிடித்து கொள்வார்கள்.
அதையும் மீறி பாம்பு கவ்விவிட்டால் வெளியே இருக்கும் நண்பன் வேகமாக காலைபிடித்து வெளியே இழுத்துவிடுவான். இவ்வாறு பிடிக்கபட்டு கொல்லப்படும் இந்த மலை பாம்புகளின் தோல்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

ஷோம்பென்




                 மாநக்காவரம் என்னும் பெரிய நிக்கோபார் தீவின் இருண்ட காடுகளுக்குள் வாழும் இவர்கள் நீக்ரீட்டோ இனம் போலன்றி சற்று வெளுப்பான நிறத்தில் இருக்கிறார்கள். திடமான உடற்கட்டுடன் சுமார் 150 செ. மீ. முதல் 160 செ. மீ வரை உயரம் உள்ளவர்கள். 55 கிலோ சராசரி எடை கொன்ட இவர்களின் பட்டுபோன்ற, நீண்ட, அடர்த்தியான தலைமுடி தோள்களில் அலை மோதும்.பாக்கு சுவைக்கும் பழக்கத்தால் காவியேறிய பற்கள். தினமும் குளிக்கும் விருப்புடையவர்கள்.இவர்களில் ஆண்கள் இடுப்பில் துணியால் ஆன கோமனமும் பெண்கள் இடையில் துணியும் அணிகிறார்கள். இரு பாலரும் மேனியை மூடுவதில்லை. பெண்கள் காதுகளில் கனமான, கூர்மையான குழைகளை அணிகிறார்கள்.

                இவர்கள் ஆடும் சாமியாட்டத்தை ' தமுழியர் ஆட்டம்' என்று சொல்கிறார்கள்.எல்லா வகையான உணவுகளுடன் தாழங்காயும் உண்பர்.முதலைகளுக்குப் பயந்து பரண்கள் மீது வீடு கட்டி வாழும் இவர்கள் தோற்றத்தில் திராவிடர்களைப்போன்று உள்ளனர். இவர்களின் பழக்க வழக்கங்கள் நம்மை ஒத்துக்காணப்படுவதால் இவர்கள் 11ம் நூற்றாண்டில் 2ம் ராஜேந்திர   சோழ மன்னன் விட்டுச்சென்ற தமிழர்களின் வாரிசுகளாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்களின் மொழியில் தமிழ்ச்சொற்களும் காணப்படுகிறது என்கிறார்கள். திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தமிழன் இழந்த மண் என்ற நூலில்                            அந்தமான்,நிகோபார்,சுமத்ரா,கம்போடியா,சிங்கப்பூர்,மலேசியா,மற்றும் இந்தோனேஷியா வரை தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாக ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூறியுள்ளார்.

செண்டினலியர்.




               இன்றுவரை எந்தச்சீர்திருத்தத்திற்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாது கற்கால மாந்தர்களாக, வெளியுலகின் தொடர்போ,வெளியுலகத்தினரின் உதவியோ இன்றி ஒரு இனம் வாழ்கிறதென்றால் அது இவர்களாகத்தான் இருக்க முடியும்.இவர்கள் மிகவும் கொடூர குணமுடையவர்கள். இவர்கள் வாழும் வட செண்டினல் தீவை யாரும் நெருங்குவதில்லை. கரிய நிறம்,நல்ல உயரம்,நீண்ட கூந்தல்,ஆடையற்ற மேனி இது இவர்களின் அடையாளம்.பெண்கள் இடையில் இழை, தலைகளை உடையாய் உடுத்துகிறார்கள்.இவர்கள் சீரான உடல் வாகுடையவர்கள். வேட்டையாடுவது இவர்கள் தொழில்.இவர்களுடன் யாரும் உறவு வைத்துகொள்ள இயலாமையால் இவர்களைப்பற்றி அதிகம் தெரியவில்லை.60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள வட செண்டினல் தீவில் வாழும் இவர்களின் மொத்த மக்கள் தொகை 80 பேர் என்று தீவு நிர்வாகச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இது ஒரு ஊகச்செய்தியாக இருக்கலாம்.ஏனெனில் ஒருவரும் போக இயலாத இந்தத் தீவில் இவர்களைப்பற்றிய செய்திகளை வெளியுலகம் அறிந்து கொள்வது கடினம்.

Thursday 9 September 2010

அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு

அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு (Auschwitz-Birkenau; Sound Konzentrationslager Auschwitz) என்பது 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜேர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜேர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் (ஒஸ்வியேச்சிம்) என்ற நகரருகில் அமைந்திருந்தது.

குளிர் காலத்தில் அவுஷ்விட்ஸ் I
இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் 1979 இலிருந்து உலக பாரம்பரியக் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை விட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன[1].

அவுஷ்விட்ஸ் I இன் வாயில்
அவுஷ்விட்ஸ் முகாம்களை நேரடியாக மேற்பார்வை செய்தவர், ஹிட்லரின் விசுவாசியான ருடொல்ஃப் ஹஸ் (Rudolf Höß) என்பவர். சுமார் 3 மில்லியன் மக்கள் இம்முகாமில் அவரது மேற்பார்வையில் கொல்லப்பட்டதாக இவர் பின்னர் நடந்த நுரம்பர்க் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். எனினும் அவர் இவ்வெண்ணிக்கையை பின்னர் 1.1 மில்லியன் எனக் குறைத்திருந்தார்[2]. இவர்களில் 90 விழுக்காட்டினர் யூதர்கள் ஆவர்[3]. யூதர்களை விட கம்யூனிஸ்டுகள், ருஷ்யப் போர்க் கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிலாவ் இனத்தவர்கள், நாடோடிகள், அரசியல் அதிருப்தியாளர்கள் ஆகியோரும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தார்கள்.

அவுஷ்விட்ஸ் II இன் வாயில், கொலைக் கதவு (2006)
ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட யூதர்கள் தொடருந்துகளிலும் வேறு வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக மிகக் கடுமையான நெரிசலில் கொண்டுவரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டனர். உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். ஏனையோர் சைக்ளோன்-பி என்ற பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்த நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்படுக் கொலை செய்யப்பட்டார்காள். குழந்தைகள் தாய்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வயதான பெண்களுடன் சேர்த்து நச்சுவாயு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மற்றும் பலர் கடும் உழைப்பு, ஊட்டச் சத்து இல்லாத உணவு, சுத்தமின்மை, பட்டினி, தொற்று நோய், தனிப்பட்ட மரண தண்டனைகள், மருத்துவப் சோதனைகள் போன்ற பல காரணிகளால் இறந்தனர்.
அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு
Auschwitz-Birkenau
ஜேர்மன் நாசி வதை முகாம் (1940-1945)*
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
The entrance to Auschwitz I. The now notorious motto over the gate, "Arbeit macht frei" translates as: "Work makes you free."
நாடு போலந்தின் கொடி போலந்து
வகை கலாசாரம்
ஒப்பளவு vi
மேற்கோள் 31
பகுதி ஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1979 (3வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

1. விடுதலை

நவம்பர் 1944 இல் சோவியத் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தபோது அவர்களிடமிருந்து தங்கள் குற்றங்களை மறைக்க நாசிகள் பிர்க்கெனாவு நச்சுவாயு அறைகளைக் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். 1945 ஜனவரியில் நாசிகள் அந்த முகாம்களைக் கைவிடத் தொடங்கியிருந்தார்கள். ஜனவரி 27, 1945 இல் கிட்டத்தட்ட 7,500 கைதிகளைச் சோவியத் செம்படையினர் மீட்டார்கள். மே 7, 1945 இல் ஜெர்மனி சரணடைந்தது. நுரம்பர்க் விசாரணை தொடங்குவதற்கு முன் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.

நண்பர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல்


சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்றபெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடையஇழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தைசேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பலபோராட்டங்களை மேற்கொண்டவர்.
ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம்அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனேசேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.

அவர் இறந்த தினத்தொடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது.மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி
மீண்டும் உயிர் பெறும். ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை.உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறைஉலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள்தெரிவிக்கின்றார்கள்.

மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்
பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே
அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு
மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி
வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக்
காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும்,வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும்பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.

எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக
நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும்ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும்.இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்கமுடியாததாகி விடும்

1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர்

1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர்

"செங் ஹெ"(Zheng He 1371–1433), சீன தேசத்து கடற்படை அட்மிரல். உலகம் சுற்றும் கடற்பயணங்களை மேற்கொண்ட ஐரோப்பிய மாலுமிகளான மகலன், கொலம்பஸ் போன்றோர் வரிசையில் சேர்த்து பார்க்கத்தக்கவர். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்னரே செங் ஹெயின் மாலுமிகள் அங்கே போயிருக்கலாம் என கருதப்படுகின்றது. அந்தக் காலத்திலேயே கட்டப்பட்ட மாபெரும் படைக்கலக் கப்பல், அதனோடு பதின்மக்கணக்கான சிறு கப்பல்கள், ஆயிரக்கணக்கான பணியாளர்கள், ஆயுதந்தரித்த வீரர்கள் சகிதம், சீனாவின் மேற்குக்கடலை(இந்து சமுத்திரத்தை அன்று சீனர்கள் அப்படித் தான் அழைத்தனர்.) எட்டு தடவைகள் வலம் வந்துள்ளார். Zheng He யின் கடற்பயணம் வெறுமனே நாடுகளை கண்டுபிடிப்பதுடன் மட்டும் நில்லாது, அங்கே அரிய பொருட்களை பரிமாறிக் கொள்வதிலும், அல்லது வர்த்தகத்திலும் ஈடுபட்டதுடன், தனது குடிமக்களை(Zheng He யும் அவரது இனத்தவர்களும் ஹுய் முஸ்லிம்கள்) மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சென்று குடியேறவும் வைத்தார்.

இவரது பயணங்களில் இலங்கை வந்த கதை சுவாரசியமானது. காலியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்று சிவனொளிபாதமலை தெய்வத்திற்கு Zheng He யின் வழிபாடு பற்றிய விபரங்கள் தமிழிலும், சிங்களத்திலுமாக பொறிக்கப்பட்டுள்ளன. அப்போது இலங்கையை ஆண்ட அழகேஸ்வரன் என்ற அரசன் இவர்களது நோக்கங்களுக்கு இடையூறாக இருந்ததாகவும், அதனால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட Zheng He குழுவினர் இந்தியாவின் கொச்சிக்கு செல்லும் படி நிர்ப்பந்தம் உருவானதாகவும் வரலாறு கூறுகின்றது. இரண்டாவது பயணத்தின் போது இலங்கை அரசனை பழிவாங்க விரும்பிய Zheng He யின் வீரர்கள், சண்டையிட்டு அழகேஸ்வரனை கைது செய்ததாகவும், இலங்கை அரசனை சீனா கொண்டு சென்று சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்க வைத்து விட்டு விடுவித்ததாகவும் சரித்திரக் குறிப்புகளில் காணக்கூடியதாக உள்ளது.

இந்த புகழ் பெற்ற சீன மாலுமி, தனது கடற்பயணங்களை ஆசிய நாடுகளுடன் நிறுத்திக்கொள்ளாது, மத்திய கிழக்கில் ஈரான் வரையிலும், ஆப்ரிக்காவில் கென்யா வரையிலும் சென்று வந்துள்ளார். இருப்பினும் இவரது கடற்பயணங்கள், அதனால் கிடைத்த பயன்கள் யாவும், சீனாவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் மறக்கப்பட்டன. அங்கே மிங் சக்கரவர்த்தியின் ஆட்சி ஆரம்பமாகிய போது, பல மடத்தனமான காரியங்கள் நடந்தேறின. Zheng He போன்ற மாலுமிகளின் கடற்பயணங்கள் தடுக்கப்பட்டன. அவர் சேகரித்து வைத்திருந்த ஆராய்ச்சிக் குறிப்புகள் யாவும் அழிக்கப்பட்டன.( தப்பிப்பிழைத்த சில குறிப்புகளில் இருந்து மட்டுமே மேற்குறிப்பிட்ட தகவல்கள் தெரிய வந்தன.) சீனர்கள் பிரமாண்டமான கப்பல்கள் கட்டும் கலையை மறந்து போனார்கள். மொத்தத்தில் சீனா வெளியுலக தொடர்பை துண்டித்துக் கொண்டு தனைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டது.

இந்த தனிமைப்படுத்தல் சில நூற்றாண்டுகள் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில், உலகின் வேறொரு பக்கத்தில், சீனர்களின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி, ஐரோப்பியர்கள் உலக ஆதிக்கத்திற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டனர். அரிய கண்டுபிடிப்புகளை செய்த( கொம்பாஸ், வேறு சில கப்பலில் பொருத்தப்பட்ட நவீன கருவிகள் யாவும் சீனர்களின் கண்டுபிடிப்புகள்) சீனாவோ அதேநேரம் வளர்ச்சியில் பின்தங்கி, இறுதியில் 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் அடிமைப்படுத்தபட்டது. சீன தேசத்து கண்டுபிடிப்பாளர்கள் ஐரோப்பிய "கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி" போலல்லாது, வாணிபம் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். சீனர்களும் நாடு பிடித்து அங்கே வர்த்தக காலனிகளை அமைத்திருந்திருந்தால், இன்று உலகம் வேறுவிதமாக காட்சியளித்திருக்கும். மலேசியா, இந்தோனேசியாவில் சென்று குடியேறியவர்கள் கூட, ஆட்சியதிகாரத்திற்காக ஆசைப்படாது, அந்த நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். ஐரோப்பியரோ அதற்கு மாறாக, சீனர்களின் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கொண்டு உலக நாடுகளை பிடித்து அடிமைப்படுத்தினர். காலனிகளை அமைத்து ஐரோப்பிய ஆதிக்கத்தை நிலை நாட்டினர்.

இவற்றை இங்கே நினைவுபடுத்துவதன் காரணம், சீனா 21 ம் நூற்றாண்டு உலக வல்லரசாக மாறிக்கொண்டு வருகின்றது. அங்கே ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, பெயரில் மட்டுமே கம்யூனிசம் வைத்திருக்கிறது. அதன் நடைமுறைகள் யாவும் சீன தேசியவாதத்தை முன்னெடுப்பதாக உள்ளன. இருப்பினும் அங்கு கம்யூனிச புரட்சி ஏற்பட்டிருக்கா விட்டால், இவ்வளவு வளர்ச்சியை எட்டியிருக்க வாய்ப்பில்லை. மேற்கத்திய ஊடங்கள், சீனா மக்களை தன்பக்கம் வைத்திருக்க தேசியவாதத்தை பயன்படுத்துவதாக ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றன. அதிலே ஓரளவு மட்டுமே உண்மை. சீனர்களின் நூற்றாண்டுகால தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை, அந்நியரால் அடிமைப்படுத்தப்பட்டமை, தமது கண்டுபிடிப்புகளை தமக்கெதிராக பயன்படுத்திய ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் மீதான வெறுப்பு, இவை எல்லாம் அவர்களுக்கு சுயபச்சாதாபத்தை ஏற்படுத்தியுள்ளன. மேற்குலகம் அவர்களின் நெருக்கடிகளை தவறாகப் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு தருணமும் தேசியவாத தீ பற்றுகின்றது. உதாரணத்திற்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருந்த நேரம் மேற்குலகம் சீனாவை சிறுமைப்படுத்தும் முகமாக திபெத் பிரச்சனை, மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சாரங்களை செய்தன. இந்த தொலைநோக்கற்ற வியூகங்கள், சீனர்களை மேலும் மேலும் அவர்களது அரசின் பின்னால் அணிதிரள வைத்தது. இன்று வெளிநாட்டவர்கள் சீனாவினுள் சுதந்திரமாக நடமாட முடிகிறது என்றால், அதற்கு காரணம் சீன அரசாங்கத்திற்கு கிடைக்கும் பெரும்பான்மை மக்கள் ஆதரவு. இந்த பெரும்பான்மை பலம், பலகட்சி தேர்தல் மூலம் தான் நிரூபிக்கப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை.

தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு

Concentration Camps" என அழைக்கப்படும் "தடுப்பு முகாம்கள்", முதன்முதலாக உலக வரலாற்றில் ஜெர்மனியில் நாசிகளால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக இப்போதும் பலர் கருதுகின்றனர். ஆனால் அதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1901 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்கள் தடுப்பு முகாம்களை அமைத்து மக்களை வதைத்த சரித்திரம் இன்று மறக்கப்பட்டு விட்டது. அதே காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளில் அமெரிக்கர்களால் தடுப்பு முகாம்கள் நிறுவப்பட்டிருந்தன.

தென் ஆப்பிரிக்காவில் டச்சு மொழி பேசும் மக்கள் 17 ம் நூற்றாண்டிலேயே சென்று குடியேறி, காலனிகளை அமைத்திருந்தனர். இன்றைய நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து சென்றவர்கள் தம்மை "ஆப்பிரிக்கானர்கள்" என அழைத்துக் கொண்டனர். இவர்கள் பேசிய மொழி பெருமளவு டச்சு மொழியை ஒத்திருந்தாலும், அதனை "ஆப்பிரிகானர் மொழி" என அழைத்தனர். 19 ம் நூற்றாண்டில் தென் ஆப்பிரிக்காவை கைப்பற்றி காலனிப்படுத்த வந்திறங்கிய ஆங்கிலேயருக்கும் இவர்களுக்கும் இடையில் உருவான முரண்பாடுகளால், வடக்கு நோக்கி நகர்ந்த ஆப்பிரிக்கானர்கள், அங்கே "Transval", "Orange Free State" ஆகிய குடியரசுகளை ஸ்தாபித்தனர். ஆங்கிலேயர்கள் அந்த குடியரசுகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் படையெடுத்தனர். பல ஆண்டுகளாக நடந்த இந்த போர், வரலாற்றில் "பூர் யுத்தங்கள்" என அழைக்கப்படுகின்றன. Boer(உச்சரிப்பு: பூர்) என்றால் விவசாயி என்று அர்த்தம்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த யுத்தம் முடிவுக்கு வந்து, ஆப்பிரிகானர் பிரதேசங்கள் யாவும் ஆங்கிலேயர் வசம் வந்து விட்டன. ஆனால் பூர்களின் கெரில்லா யுத்தம் தொடர்ந்தது. "மக்கள் என்னும் நீருக்குள் நீந்தும் மீன்களே கெரில்லாக்கள்" என்பது போர் நியதி. அதனால் நீரை வெளியேற்றி விட்டால் மீன்கள் இறந்து விடும் என்று கணக்குப் போட்டது ஆங்கிலேய அரசு. அந்த சிந்தனையில் உதித்த திட்டம் தான் "தடுப்பு முகாம்கள்." ஆப்பிரிகானர் குடியிருப்புகளில் இருந்த பெண்கள், குழைந்தைகள் எல்லோரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சுற்றிவர முட்கம்பி வேலி இடப்பட்டு, ஆங்கிலேய இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட இந்த முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீரின்றி, சுகாதார வசதிகள் இன்றி பலர் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். 26730 ஆப்பிரிகானர்கள் இந்த தடுப்பு முகாம்களில் மரணமுற்றனர். இதில் பெரும்பான்மையான சாவுகள் வசதிக் குறைபாடுகளால் நேர்ந்தவை.

காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை தொடர்ந்த பூர் படையினர், இறுதியில் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர். சமாதான ஒப்பந்தம் ஒன்றின் பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். புதிய தென் ஆப்பிரிக்கக் குடியரசில் ஆப்பிரிகானர்கள் "தேசியக் கட்சி" என்ற பெயரில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் இணைந்து கொண்டனர். ஆங்கிலேயர்கள் போரில் வெற்றியடைந்ததாலும், அவர்களின் ஆதிக்கம் அடுத்து வரும் நூறாண்டுகளுக்கும் நிலைத்து நின்றதால், இத்தகைய வரலாற்றின் கறுப்புப் பக்கங்களை இலகுவாக மறைக்க முடிந்தது. ஆங்கிலேயர்கள் தமது தடுப்பு முகாம் பரிசோதனையை, தமது நட்பு நாடுகளிலும் அறிமுகப்படுத்தினர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம்: மலேசியா.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவை இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ஆக்கிரமித்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தியது. தனது காலனியை இழந்த பிரிட்டன், கம்யூனிஸ்ட்களின் போராட்டத்திற்கு நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் முடிவு நேச நாடுகளுக்கு சாதகமாக அமைந்ததால், ஜப்பானியப் படைகள் பின்வாங்கி ஓடவும், பிரிட்டிஷ் படைகள் மலேசியாவை மீளக் கைப்பற்றின. போருக்குப் பின்னர் மலேசியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்த ஆங்கிலேயர்கள், ஆக்கிரமிப்புக் காலத்தில் ஜப்பானியருடன் சேர்ந்து வேலை செய்த மலேய மேட்டுக்குடியினரின் கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்ததனர். ஜப்பானியர்களை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்ட்கள் ஓரங்கட்டப்பட்டனர். இந்த அட்டூழியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த கம்யூனிஸ்ட்கள் மீண்டும் ஆயுதங்களை கையிலெடுத்தனர்.

தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்ற புதிய மலேய இராணுவத்தால் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களை எதிர்த்துப் போரிட இயலவில்லை. ஒரு சில வருடங்கள் போர் நீடித்தால் மலேசியா கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சிய பிரிட்டன், மலேசிய அரசிற்கு உதவி வழங்க முன்வந்தது. வெறுமனே இராணுவ ஆலோசனையுடன் நின்று விடாது, பிரிட்டிஷ் வீரர்களும் களத்தில் இறங்கினர். அப்போதும் கம்யூனிச கெரில்லாகளை அடக்க முடியவில்லை. அப்போது தான் பிரிட்டன் தனது "தென் ஆப்பிரிக்க தடுப்பு முகாம் பரிசோதனையை" மலேசியாவிற்கும் சொல்லிக் கொடுத்தது.

மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியானது, அப்போது சீனாவில் வெற்றிவாகை சூடிய மாவோவின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. அதற்கு அந்தக் கட்சி மலேசிய சிறுபான்மை இனமான சீனர்களில் இருந்து உருவானதும் ஒரு காரணமாக இருக்கலாம். மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையும், பெரும்பாலான உறுப்பினர்களும் சீனர்களாக இருந்தனர். மலேய, இந்திய உறுப்பினர்களும் இருந்த போதும் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அவர்களது பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருந்தது. கட்சியின் ஆதரவுத்தளமும் சீன சிறுபான்மைச் சமூகமாகவே இருந்தது. இந்த இனரீதியான வேறுபாட்டை, மலேசிய அரசும், பிரிட்டனும் தமக்குச் சார்பாக பயன்படுத்தினர்.

மலேசியாவில் இருந்த சீனர்களின் நகரக் குடியிருப்புகள், கிராமங்கள் யாவும் சுற்றி வளைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். தொலைதூரங்களில் அமைக்கப்பட்ட, இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். மக்களின் சுதந்திர நடமாட்டம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களை விட்டு யாரும் வெளியேற விடாமலும், வெளியில் இருந்து யாரும் உட்புக முடியாமலும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டன. காடுகளுக்குள் மறைந்திருந்த கெரிலாக்கள் அழிக்கப்படும் வரை, மக்கள் தடுப்பு முகாம்களுக்குள் வருடக்கணக்காக வைத்திருக்கப்பட்டனர். என்பதுகளின் இறுதியில் போராட்டத்தை தொடர முடியாத கம்யூனிஸ்ட் கட்சி அரசுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு சரணடைந்தது. முக்கிய தலைவர்களும், சில உறுப்பினர்களும் தமது குடும்பத்துடன் தாய்லாந்தில் புகலிடம் கேட்டு அங்கேயே தங்கி விட்டனர்.

தடுப்பு முகாம்கள் அமைப்பதில் ஆங்கிலேயரின் பேரப்பிள்ளைகளான அமெரிக்கர்களும் சளைத்தவர்கள் அல்ல. அமெரிக்க நாட்டின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, அம் மக்கள் Reservation என அழைக்கப்படும் குறுகிய பிரதேசத்திற்குள் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். இன்றைக்கும் அமெரிக்காவிலும், கனடாவிலும் காணப்படும் இந்த Reservation கிராமங்கள், முட்கம்பி வேலி இடப்படாத, இராணுவ காவல் இல்லாத தடுப்பு முகாம்கள் என்பதில் ஐயமில்லை. நமக்கெல்லாம் தெரிந்த தடுப்பு முகாம்கள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் தோன்றி இருந்தன. அப்போது அமெரிக்க ஜப்பானுடன் போரில் ஈடுபட்ட காலமது. அமெரிக்காவில் இருந்த ஜப்பானிய சிறுபான்மைச் சமூகத்தினர் அனைவரும் எதிரிகளாக சந்தேகிக்கப்பட்டனர். அதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட முழு ஜப்பானிய மக்களும், அமெரிக்கா எங்கும் நிறுவப்பட்ட தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். போரில் ஜப்பான் தோற்ற பின்னர் தான் அந்த முகாம்கள் திறந்து விடப்பட்டன.

ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்


“ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை” சந்தித்துதான் இன் றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகட னங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக் கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத் திருக்கும் பிரகடனங்களும் உள்ளன.
ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடு களாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடு கள் இருந்துள்ளன. இருந்தும் வருகின்றன.
அவைகளைப் பற்றிய ஒரு பார்வை:
ஐ.நாவின் பிறப்பின் முன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்
ஸ்கொட்லாந்து
1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதி யற்ற தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஸ்கொட்லாந்து சுதந் திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசர ணையாளராக செயற்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல் கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள்
1800களின் தொடக்கத்தில் பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்கப்   புரட்சிக்கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச்   சிந்தனைக்கு வித்திட்டன.
1810 மே 25 ஆம் நாள் ஸ்பெய்னின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சுப் படையணிகள்இ இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கத்தை அமைத்தது. அதனில் இணைந்து கொள்ளுமாறு இதர ஸ்பெய்ன் கொலனி நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது.
அப்போதைய ஸ்பெய்ன் காலனி நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. பிரெஞ்சினது கோரிக்கையை நிராகரித்த பராகுவே 1811 ஆம் ஆண்டு “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” அறிவித்தது.
1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகட னம் வெளியிட்டது. அர்ஜெண்டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண் டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது.
1822 ஆம் ஆண்டு போர்த்துக்கலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.
1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.
1828 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா- பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் உருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரடகனம் செய்தது.
மத்திய அமெரிக்க நாடுகள்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவானதைத் தொடர்ந்து 1823 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் கோஸ்ரா ரிக்கா, எல் சல்வடோர், கௌதமாலா, ஹோண்டுராஸ், நிக்கரகுவா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந் தன. ஆனால் இக்கூட்டமைப்பிலிருந்து 1838 ஆம் ஆண்டில் நிக்கரகுவா தானே பிரிந்து செல்வதாக அறிவித்தது.  அதனைத் தொடர்ந்து ஹோண் டுராஸ் மற்றும் கோஸ்ரா,  ரிக்கா ஆகிய நாடுகளும் பிரிந்து சென்றன.
இதனால் மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு அக்கூட்டமைப்பு 1840 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. எல்சவடோவர் நாடு தன்னை தானே சுதந்திர நாடாக 1841 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அறிவித்துக் கொண்டது.
எஸ்தோனியா
எஸ்தோனிய தேசிய இன மக்கள் வரலாறு நெடுகிலும் தங்களது சுய நிர்ணய உரிமையை மாறி மாறி அமைந்த வரலாற்றுப் பேரரசுகளிடம் இழந்திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஸ்யப் பேரரசின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்தது எஸ்தோனியா. 1917 ஆம் ஆண்டு ரஸ்யப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் ரஸ்ய இராணுவத்துக்கு எதிராக ஜேர்மன் வெற்றி பெற்ற நிலையில் எஸ்தோனியாவின் மூத்த குடிமக் கள் “எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனத்தை 1918 ஆம் ஆண்டு பெப்ரு வரி 24 ஆம் நாள் வெளியிட்டனர். அந்தப் பிரகடனம் “எஸ்தோனிய” தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை உலகுக்கு அறிவித்தது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட பின்னர்,  சுதந்திரத்துக்கான போரை 2 ஆண்டு காலம் எஸ்தோனியா நடத்தியது. 1920 ஆம் ஆண்டு ரஸ்யாவுக்கு எதி ரான சுதந்திரத்துக்கான எஸ்தோனியாவின் யுத்தம் வெற்றியடைந்தது. எஸ்தோனியாவின் இந்த சுதந்திர வரலாறு நீடித்ததாக இல்லை. 1940 ஆம் ஆண்டு சோவியத் ரஸ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1990-களின் இறுதியில் சோவியத் ரஸ்யா உடைந்து நொறுங்கிய போது தனது சுதந் திர காற்றை எஸ்தோனியா சுவாசித்தது. இருப்பினும் 1918 ஆம் ஆண்டு எஸ்தோனிய வெளியிட்ட “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனம்தான்” அந்நாட்டின் வரலாற்றில் சுதந்திர பிரகடன ஆவணமாக இடம்பெற்றுள்ளது.
பின்லாந்து
எஸ்தோனியாவைப் போலவே 1917 ஆம் ஆண்டு ரஸ்யப் புரட்சியைத் தொடர்ந்து பின்லாந்தும் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள் பின்லாந்தின் நாடாளுமன்றம் பின்லாந்தின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. அப்பிரகடனத்தை சோவியத்தின் உயர் நிர்வாகப் அமைப்பும் ஜேர்மனியும் ஸ்காண்டி நேவிய நாடுகளும் டிசம்பர் 22 ஆம் நாளே அங்கீகரித்தது.
கினியா பிசாவு
மேற்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகேய காலனி நாடாக இருந்த கினியா பிசாவு என்கிற நாடு. இதன் மொத்த மக்கள் தொகை 14 இலட்சம் பேர் தான். போர்த்துக்கேயர்களின் அடிமை வர்த்தகத்துக்கான நாடாக இருந்த அந்நாட்டில் 1956 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்துக்கான ஆயுதக் குழு உருவானது.  அந்நாட்டின் சுதந்திரப் போருக்கு கியூபா உதவியது.
1973 ஆம் ஆண்டு விடுதலைக்காகப் போராடிய ஆயுதக் குழுவின் கட்டுப் பாட்டில் அந்நாட்டின் பெரும்பகுதி பகுதிகள் வந்தன.   அதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 24 ஆம் நாள் ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அந்நாடு வெளியிட்டது.
1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் 93-க்கு 7 என்ற வாக்குகளில்  சுதந்திரப் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டது.
ஹெய்ட்டி
பிரெஞ்சு கொலனியின் கீழ் இருந்த ஹெய்ட்டியானது 1804 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே வெளியிட் டது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாவது நாடாக சுதந்திரத் தைப் பிரகடனம் செய்தது ஹெய்ட்டி ஆனால் 1915 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த ஹெய்ட்டியை ஆக்கி ரமித்து அரசாட்சி செய்தது அமெரிக்கா அதன் பின்னர் சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.
அமெரிக்கா
1776 ஆம் ஆண்டு யூலை 4ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானி யாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்கா வின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப்பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பிரகடனம்” என்பதாகும். இன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப் படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கியவர்கள், தோமஸ் ஜெப்பர்சன், ஜோன் ஆதம்ஸ், பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்.
இந்தோனேசியா
இந்தோனேசியாவை நெதர்லாந்து ஆக்கிரமித்து டச்சு கிழக்கு இந்திய காலனியை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக்குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டச்சு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற அந்தக் காலத்தில் ஹிரோசிமா-நாகசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஜப்பான் சரணடைந்த இரண்டே நாட்களில் 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் தேசியவாதத் தலைவர் சுகர்னோ சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார்.   அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனப் பாணியில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இதே காலகட்டத்தில் நெதர்லாந்து மீளவும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனால் ஆயுத மற்றும் இராஜதந்திர மோதல்கள் ஏற்பட்டன. இது 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இந்தோனேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்தது.
கொரியா
ஜப்பானிய கொலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் என்பது ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துக்கள் ஜப்பானால் சூறையாடப்பட்டன. 1900-களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரிஸ் அமைதி மாநாட்டில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாள் கொரியாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்த போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 1இ500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7இ500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லிதுவேனியா
ஜேர்மனிய துருப்புக்கள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990-களில் சோவியத் ஒன்ரியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.  பிரகடனத்துக்குப் பின்னர் கெரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்
1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் ஸ்பெய்னின் கொலனி ஆதிக் கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரடகனத்தை வெளியிட் டது.   ஆனால் பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும், ஸ்பெயினும் இதனை ஏற்க மறுத்தன.  1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்ரம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன.
பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப்பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியரசானது 1899 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஸ்பெய்ன் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.  1899 ஆம் ஆண்டு அமெரிக்காவும் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.
இந்த யுத்தத்தின் போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கெரில்லாப் போர் முறையை கடைப்பிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத் தப்பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ,  சில துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.  அதன் பின்னர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்காஇ 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது. 1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைப்பிடித்து வருகின்றனர்.
ஐ.நா. பிறப்பின் பின்னர் வியட்நாம்
1887 இல் தென்கிழக்கு ஆசியாவில் இன்றைய வியட்நாம், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோசீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தோசீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்ஸ் அனுமதிக்கத்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த இந்தோசீன ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.
இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் நாள் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார்.   இதனைத் தொடர்ந்து பிரெஞ்சுப் படையினருக்கும் வியட்நாமியர்களுக்கும் இடையே மோதல் உருவானது.
1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலைகொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.
1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.  அதே ஆண்டுகளில் ரஸ்யாவின் ஸ்டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ரஸ்யா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.
கெரில்லாப் போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழிவகுத்தது.
இஸ்ரேல்
1947 ம் ஆண்டு பலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல், ஒருதலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப்பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, உருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ரஸ்யா, இஸ்ரேலை அங்கீகரித்ததது. அதன் பின்னர் பல நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்தன.
பலஸ்தீனம்
1988 ஆம் ஆண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பலஸ்தீன தேசிய சபையானது பலஸ்தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பலஸ்தீன பிரதேசமும் இருக்கவில்லை. பலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத்தில் பலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீகரித்தன. பலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம்,  ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்குத் திமோர்
போர்த்துக்கலின் காலனி நாடாக இருந்த கிழக்குத் திமோர் “1975 ஆம் ஆண்டு நவம்பர் 28″ ஆம் நாள் தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது. அந்தப் பிரகடனத்தை மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய- லெனிய அரசுகள் அங்கீகரித்தன. மக்கள் சீனம் அங்கீகரித்தது. அவுஸ்திரேலியா, போர்த்துக்கல்,  இந்தோனேசியா ஆகியவை அங்கீகரிக்கவில்லை.
அதே நேரத்தில் இந்தோனேசியாவினால் அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டு அந்நாட்டினது ஒரு மாகாணமாக கிழக்குத் திமோர் மாற்றப்பட்டது.
ஆனால் கிழக்குத் திமோர் மக்கள் இரு தசாப்த காலமாக விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் நாள் கிழக்குத் திமோரில் ஐ.நா. மேற்பார்வையில், இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர் பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான மக்கள், கிழக்கு திமோரின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள் கிழக்குத் திமோரை ஒரு தனிநாடாக அனைத்துலகம் ஏற்றுக் கொண்டது.
அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் பிரகடனங்கள்
சோமாலிலாந்த்
அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பையொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிற நாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென்பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.
1884 ஆம் ஆண்டில் சோமாலிலாந்த்இ பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமாலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு கொலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலியின் ஆக்கிரமிப்பு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமாலியா நாடு உருவாக்கப்பட்டது.
இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களினது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்திடினர். இதனால் 1980-களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிரஸ்இ சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.
1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது.
சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் யாப்பானது மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.
சோமாலிலாந்த் அரசியல் யாப்பின்படி,  சோமாலிய மொழி உத்தியோகப்பூர்வ மொழியாகும். பாடசாலைகளிலும் மசூதிகளிலும் அரபி மொழி பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.
பெல்ஜியம், கானா,  தென்னாபிரிக்கா,  சுவீடன்,  ருவாண்டா,  நோர்வே,  கென்யா,  அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசியல் உறவுகளைப் பேணி வருகிறது.
2007 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.
அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
எத்தியோப்பியாவின் பிரதமர்இ 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமாலிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரா தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.
சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலிலாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தென் கமரூன்
கமரூன் கூட்டமைப்பில் 1961 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1 ஆம் நாள் தென்கமரூன் இணைக்கப்பட்டது. தென்கமரூனானது ஆங்கில மொழி பேசுவோரையும் இதர பகுதிகள் பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கொண்டதாக இருந்தது.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் வாக்கெடுப்பின் மூலம் கமரூன் கூட்டமைப்பு “ஒற்றையாட்சி” முறைக்கு மாறியது. தென் கமரூன் பிரதேசம் சுயாட்சியை இழந்தது. கமரூன் குடியரசினது வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களாக தென்கமரூன் மாற்றமடைந்தது. மேலதிக சுயாட்சி கோரிக்கையை தென்கமரூன் பிரதேசத்தின் முன்வைத்து போராடினர். 1961 ஆம் ஆண்டு கூட்டமைப்பு முறை மீள உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கமரூன் நாட்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு தென்கமரூன் பிரதேசம் விடுதலை கோரியது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் நாள் தென்கமரூன் மக்கள் ஒன்றியத்தினால் அம்பஜானியா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையைப் போன்ற விடுதலைக்குப் போராடும் அல்லது அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் நாடுகளினது ஒன்றியமான யு.என்.பி.ஓவில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தென்கமரூன் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
இதேபோல் செச்சன்யா,  புண்ட்லாந்து,  நாகர்னோ கராபக், தென் ஒசீட்டியா,  அப்கைசியா மற்றும் டிரான்ஸ்னிஸ்திரியா ஆகிய பிரதேசங்களும் 1990 ஆம் ஆண்டு முதல் தங்களது தன்னிச்சையாக தமது சுதந்திர நாட்டுப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.
தோல்வியில் முடிந்த சுதந்திரப் பிரகடனங்கள்
அமெரிக்க பிரதேசத்தில் உள்ள கரோலினாவானது 1712 ஆம் ஆண்டு இரண்டு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளாகப் பிரிந்தன.
1776 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தெற்கு கரோலினா,  பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்து தனக்கான சுய அரசாங்கத்தை அமைத்தது. 1788 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8 ஆவது மாகாணங்களில் ஒன்றாக அது இணைந்தது.
இருப்பினும் 1860 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் நாள், அமெரிக்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக தெற்கு கரோலினா சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க உள்நாட்டு யுத்தம் உருவானது. அதன் பின்னர் அமெரிக்கக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.
குடியேற்றப்பட்ட வெள்ளை இனத்தவரின் “ரொடீசியா” பிரகடனம்
- பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் உரிமையாளரான சீசில் ரொட் என்பவர், ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கங்களை வெட்டி எடுக்கும் உரிமை பெற்றார்.
சீசில் ரொட் மேலதிகமாக வெள்ளை இனத்தவரை ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவில் குடியேற்றினார். இதனால் 1893 இல் யுத்தம் ஏற்பட்டது.
ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவின் பெரும் பகுதிகளை ரொட்,  தனது சொந்த கூலிப்படையின் துணையுடன் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஜாம்பியா சீசில் ரொட்டின் பெயரால் வடக்கு ரொடீசியாகவும், ஜிம்பாப்வே தெற்கு ரொடீசியாகவும் மாறின. இரண்டு ரொடீசியாக்களுமே 1911 ஆம் ஆண்டு வரை தனித்தே இயங்கின.
1923 ஆம் ஆண்டு ஆண்டு பிரித்தானியாவின் செல்வாக்கு உட்பட்ட பகுதியில் அமைந்த சுயாட்சி அரசாங்கமாக தெற்கு ரொடீசியாவை பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் மாற்றியது. 1924 ஆம் ஆண்டு வடக்கு ரொடிசீயாவின் நிர்வாகத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒப்படைத்தது.
1930 ஆம் ஆண்டு வெள்ளை இனத்தவரின் மேலாதிக்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. முறைசார் வர்த்தகங்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்ட பூர்வகுடி கறுப்பின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால் தங்களது சொந்த மண்ணில் வெள்ளை இனத்தவர்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளப்பட்ட பண்ணைகளிலும் தங்கச் சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தாக வேண்டிய நிலைக்கு பூர்வகுடி கறுப்பின மக்கள் தள்ளப்பட்டனர்.
1953 ஆம் ஆண்டு தெற்கு ரொடீசிய கொலனித்துவ சுயாட்சி அரசாங்கம் மற்றும்  பிரித்தானிய நிர்வாகத்தின் கீழாக வடக்கு ரொடீசியா  மற்றும் நியஸலாந்த் (தற்போதைய மலாவி) ஆகிய இணைக்கப்பட்டு ரொடீசியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.
தொடர்ந்தும் பூர்வகுடி கறுப்பின மக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகினர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம்,  சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் ஆகியவை பூர்வகுடி கறுப்பின மக்களுக்காகப் போரடின. அப் போது சிம்பாப்வே பூர்வகுடி கறுப்பின மக்களின் விடுதலை இயக்கங் களைத் தடை செய்த தெற்கு ரொடீசிய நிர்வாகம்,  அதன் தலைவர்களை சிறையிலடைத்தது.
1960-களில் ஆப்பிரிக்காவிலிருந்த பிரித்தானிய கொலனி நாடுகள் விடுதலை பெற்றன. இதனால் ரொடீசியக் கூட்டரசு கலைந்தது.
1963 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழி ருந்த வடக்கு ரொடீசியாவான ஷாம்பியா விடுதலை பெற்றது. நியாஸ லாந்த் என்ற மலாவியும் விடுதலை பெற்றது.
இந்நிலையில் தெற்கு ரொடீசியாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இயான் சிமித், பிரித்தானியாவிடம் தெற்கு ரொடீசியாவுக்கான விடுதலை யைக் கோரினார். ஆனால் பிரித்தானிய அரசாங்கமோ, பூர்வகுடி கறுப் பின பெரும்பான்மையினரின் ஆட்சி ஒப்படைக்கின்றபோதுதான் சுதந் திரம் பற்றி பரிசீலிக்க முடியும் என்று அறிவித்தது.
இதனால் குடியேற்றப்பட்ட வெள்ளை இன மக்களின் சார்பில் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் தெற்கு ரொடீசியா ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இயான் ஸ்மித் தன்னை பிரதம ராக அறிவித்தார். ரொடீசியாவின் இந்தப் பிரகடனத்துக்கு முன்னோடிப் பிரகடனமாக அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை ஸ்மித் சுட்டிக் காட்டினார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் பொதுநலவாய சபையும் இதனை எதிர்த்தன. அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க மறுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல் முறையாக ரொடீசியா மீது 1968 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே தடை செய் யப்பட்ட இயக்கங்கள், கெரில்லா யுத்தங்களைத் தொடங்கின.
தென்னாப்பிரிக்க நாடு, ரொடீசியா மீது கரிசனை காட்டியபோதும் அங் கீகரிக்க வில்லை. 1979 ஆம் ஆண்டு நோர்வேயில் இருந்த தனது மக னின் திருமணத்தில் பங்கேற்க தெற்கு ரொடீசியாவின் பிரதமராக அறி வித்துக் கொண்ட ஸ்மித்துக்கு நோர்வே அரசாங்கம் அனுமதி அளிக்க வும் மறுத்தது. ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்துக்கு பின்னர் அனைத்துலகத்திலிருந்து தெற்கு ரொடீசியா தனிமைப்படுத்தப்பட்டதாக மாறியது. அனைத்துலக நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சி யில் 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு இனப்பாகுபாடற்ற தேர்தல் நடத்த தெற்கு ரொடீசிய அரச தலைவராக இருந்த ஸ்மித் ஒப்புக் கொண்டார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்மித்தின் நிறவெறி அரசாங்கத்தை பூர்வகுடி கறுப்பின மக்கள் தூக்கியெறிந்தனர். ஜிம்பாப்வே ஆப்பிரிக்கர் கள் தேசிய ஒன்றியத்தின் தலைவர் முகாபே வெற்றி பெற்று தொடர்ந் தும் ஆட்சியில் உள்ளார். தெற்கு ரொடீசியா,மீண்டும் ஜிம்பாப்வே என்ற பெயர் மாற்றம் அடைந்தது.
கடங்கா
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மாகாணம் கடங்கா என்பதா கும். கொங்கோ அரசாங்கமாகனது கடங்காவுக்கு 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேலதிக சுதந்திரத்துக்கான அனுமதியை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடங்கா,  தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு பெல்ஜியம் ஆதரவளித்தது. இதனிடையே 1961 ஆம் ஆண்டு கொங்கோவின் பிரதமர் லூமூமாம்பா படுகொலை செய்யப் பட்டார். லூமூமாம்பாவின் மரணத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஐ.நா. படை, கடங்கா மீது தாக்கு தல் நடத்தியது. 1963 ஆம் ஆண்டு கடங்காவின் தனிநாட்டுப் பிரகட னத்தை ஐ.நா. முடிவுக்கு கொண்டு வந்தது.
மினெர்வா
1852 ஆம் ஆண்டு பசிபிக் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு மினெர்வா. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இத்தீவை ஆக்கிரமித்திருந்தது. 1972 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் தன்னை ஒரு சுதந்திர நாடாக மினெர்வா பிரகடனம் செய்தது. சொந்தப் பணத்தை யும் அது உருவாக்கியது. மினெர்வாவின் சுதந்திரப் பிரடகனம் குறித்து அண்டை நாடுகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, டொங்கா, பிஜி உள்ளிட்டவை விவாதித்தன. இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள்,  டொங்கா நாட்டு மக்களின் மீன்பிடித்தளமாக மினெர்வா இருப்பதாகவும் மினெர்வா மீது தமது நாட்டுக்கே உரிமை இருப்பதாக வும் வர்த்தமானி அறிவித்தலை டொங்கா அரசாங்கம் வெளியிட்டது. தற்போது வரை மினெர்வா விடுதலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வடக்கு சைப்ரசின் துருக்கிய குடியரசு
பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து சைப்ரஸ் 1960 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் நாள் விடுதலை பெற்றது. அந்நாட்டில் கிரேக்க சைப்பீரி யர்கள் 80 விழுக்காட்டினரும் துருக்கிய சைப்ரீயர்கள் 18 விழுக்காடும் உள்ளனர்.
1963 ஆம் ஆண்டு அந்நாட்டு முதலாவது அரச தலைவர் ஆர்ச்பிசம் மகாரியஸ்  13 அரசியல் யாப்பு திருத்தங்களை பரிந்துரைத்தார். ஆனால் இத்திருத்தங்களை துருக்கிய சைபீரியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து சைப்ரஸ் அரசாங்கத்துக்கும் சைப்பீரிய துருக்கியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை 1965 ஆம் ஆண்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சைப்ரஸ் மீது 1974 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள் துருக்கி தாக்குதல் நடத்தியது. 1960 ஆம் ஆண்டைய அரசியலமைப்பு முறையை மீள நடைமுறைப்படுத்த துருக்கி அழுத்தம் கொடுத்து இத் தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுக் கள் நடத்தப்பட்டன. அப்பேச்சுக்கள் தோல்வியடைய சைப்ரசுக்குள் துருக் கியப் படை உள்நுழைந்தது. 37 விழுக்காட்டு பிரதேசத்தை துருக்கி ஆக்கி ரமிக்க இலட்சக்கணக்கான கிரீக் சைப்பீரியர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் வடக்கு சைப் ரசில் துருக்கிய குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் 541 ஆம் தீர்மானத்தின்படி 1983 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இந்தப் பிரகடனம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. மேலும் வடக்கு சைப்ரசிலிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என் றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. துருக்கி மட்டுமே அந்நாட்டை அங்கீகரித் தது. சைப்ரஸ் நாட்டை குறிப்பிடுகையில் “கிரீக் சைப்ரஸ் நிர்வாகப் பகுதி” என்றே இன்றளவும் துருக்கி குறிப்பிட்டு வருகிறது.
நாகலாந்து
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாகலாந்துக்கு பிரித்தானி யார்கள் 1832 ஆம் ஆண்டு சென்றனர். அதுவரை எதுவித அன்னிய தலையீடு இல்லாமல் சுதந்திர நாடாக நாகா பிரதேசம் இருந்து வந்தது. பிரித்தானிய இந்திய நிர்வாகத்தில் கூட நாகாலாந்து இணைக்கப்பட வில்லை.
1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் நாள் இந்திய விடுத லைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான காந்தியை நாகா குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர். நாகா தேசிய இனமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமை படைத்தவர்கள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை காந்தியார் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் நாள் நாகலாந்து சுதந்திர நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது.
1947 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துக்கும் சுதந்திர நாகலாந்து நாட் டின் தேசிய சபைக்கும் இடையே 9 அம்ச ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத் தானது. அதில் நாகா மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியா அங்கீ கரித்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா பின்னர் நிராகரித்து இந் திய அரசியல் யாப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்திய அரசியல் யாப்பை ஏற்க மறுத்த நாகலாந்துக்கு இந்திய ஒன்றி யத்தில் இணையுமாறு பகிரங்க அழைப்பையும் இந்தியா விடுத்தது.
இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் நாகாலந்து தேசிய சபையானது பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. 99.9 விழுக்காடு நாகா தேசிய இனமக்கள்,  இறைமையுள்ள நாகா சுதந்திர அரசாங்கத்துக்காகவே வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு விடயம் ஐக் கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகாலாந்து தனி நாட்டு அரசாங்கமும் இராணுவம் உருவாக்கப்பட்டது.  ஆனால் 1960-களில் நாகாலந்தை இந்தியா ஆக்கிரமித்து தனது மாநிலங்களில் ஒன் றாக்கிக் கொண்டது.  நாகாலாந்தின் சுய நிர்ணய உரிமைக்கான விடுத லைப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.  1993 ஆம் ஆண்டு ஐ.நா. சபையைப் போன்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளின் ஒன்றி யத்தில் நாகா விடுதலை அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இணைந்து கொண்டது.

டியாகோ கார்சியா

திருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு -

"டியாகோ கார்சியா", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பிரிக்கா, அல்லது இந்தியாவில் இருந்து சென்று குடியேறியவர்கள். ஒரு நாள் திடீரென வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தீவுவாசிகளை இரவோடிரவாக வெளியேறச் சொன்னார்கள். அனைவரையும் கப்பலில் ஏற்றி மொரிசியசில் இறக்கினார்கள். டியோகோ கார்சியா, தீவு மக்களின் ஒப்புதல் இல்லாமலே அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது. நாடுகடத்தப்பட்ட டியாகொகார்சியா மக்கள் பெயரளவில் பிரிட்டிஷ் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டனர். இருப்பினும் மொரிசியசில் வறுமையில் உழன்று, தற்கொலை செய்து கொண்ட அபலைகளுக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சோறு போடவில்லை.
இன்று அது அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளங்களில் ஒன்று. அமெரிக்க இராணுவவீரர்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே தீவில் வசிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புக்கு டியாகோ கார்சியா தளம் அளப்பெரிய பங்காற்றியுள்ளது. 
  http://video.google.com/videoplay?docid=-3667764379758632511&hl=nl#