Saturday 4 September 2010

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல, இயற்பியலே!-ஸ்டீபன் ஹாக்கிங்

Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.

பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.

தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.

இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய 'தி கிரான்ட் டிசைன்' (The Grand Design) என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே.

சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.

பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

அதேசமயம், 1998ல் ஹாக்கிங் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' நூலில், பூமியின் உருவாக்கலில் கடவுளுக்கும் பங்கு இருக்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார் ஹாக்கிங்.

ஆனால் தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங்.

தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.

என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.

2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை 'கடவுள்' என்று கூறிக் கொள்ளலாம். அதேசயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.

இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த 'இருண்ட சக்தி' பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை.

தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஹாக்கிங். இது செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது.

உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட குதிரைக்குட்டி

ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி

 
உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட Einstein ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி அமெரிக்காவில் 23/04/2010 பிறந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்ன்ஸ்டெட் என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணையில் இந்த குதிரைக்குட்டி பிறந்துள்ளது. பிறந்த போது உயரம் 35 சென்டி மீட்டர் மட்டுமே. பிறந்த போது இதனுடைய நிறை (2.7Kg) ஆகும் உலகின் மிக குள்ளமான குதிரை இதுவாகும்














ஆப்ரிக்கர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள்

AfricansPetAnimals1

AfricansPetAnimals2
AfricansPetAnimals3
AfricansPetAnimals4
AfricansPetAnimals5
AfricansPetAnimals6
AfricansPetAnimals7
AfricansPetAnimals8

தம் அடிக்கும் நாய்க் குட்டி



சீனாவில் ஒரு நாய்க் குட்டி ஒன்று சிகரெட் புகைக்கப் பழகி உள்ளது. சும்மா அல்ல.... நாளொன்றுக்கு ஒரு சிகரெட் பாக்கெட் வரை ஊதித் தள்ளுகின்றது.

சிக்கிம்-வித்தியாசமான மாநிலம்

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். 1975ஆம் வருடம் இது இந்தியாவுடன் சேர்க்கப் பட்டது. அதுவரை ஒரு தனி நாடாக விளங்கியது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், கிழக்கில மேற்கு வங்களாமும் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்செஞ்சுங்கா சிக்கிமில் உள்ளது.

இந்தியாவுடன் இணைந்தது எப்படி?

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, சிக்கிம் இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டது. பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்து இந்தியாவின் துணை மாநிலமாக இருக்க ஒப்புக் கொண்டார். அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற எல்லா விஷயங்களிலும் சுயாட்சி அந்தஸ்து பெற்றிருந்தது. நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-ல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

வித்தியாசமான மாநிலம்

சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 65 கிலோமீட்டரும் விஸ்தீரணம் கொண்டுள்ளது. நான்கே மாவட்டங்கள். கிழக்கு சிக்கிம்(தலைநகரம் காங்டாக்), மேற்கு சிக்கிம்(தலைநகரம் கைஷிங்), வடக்கு சிக்கிம்(தலைநகரம் மங்கன்), தெற்கு சிக்கிம்(தலைநகரம் நாம்ச்சி) என்பவை தான் மாவட்டங்களின் பெயர்கள். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாக்.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் எவ்வளவோ அரசியல் குழப்பங்கள், தீவிரவாத துர்நிகழ்வுகள், போதைப் பொருள் புழக்கங்கள், சமூக பொருளாதாரக் கோணங்களில் பின்தங்கிய நிலை என்று இருந்தாலும் இயற்கை அன்னையின் பூரண அரவணைப்பு இருக்கிறது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம்.
அரசியல் என்று பார்த்தால் சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் என்கிற ஒரே கட்சி தான் பிரதானம். பெயருக்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ். 2009 மே மாதம் பாராளுமன்றத்துடன் சேர்ந்து நடந்த மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 23 தொகுதிகளில் 23-ஐயும் வென்று பாராளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றி இருக்கிறது சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்.
சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், பொதுசுகாதாரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து நிர்வகிக்கப்படும் பகுதியாகத் திகழ்கிறது இந்தச் சிறிய மாநிலம். ஒட்டுமொத்த சிக்கிமிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில் தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் அவ்வளவு பயணிகள் வந்து செல்லும் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதில்லை.
ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு நிறைய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. டாக்சி வாடகையாகட்டும், அறைகளின் வாடகையாகட்டும், உணவுப் பொருட்களின் விலையாகட்டும் எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே. மூவாயிரம் அடியிலிருந்து 28208 அடி உயரம் (உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்ஜன் ஜங்கா இந்த மாநிலத்தின் தான் உள்ளது) வரை மாநிலத்தின் உயரம் வேறுபடுகிறது.
மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐநூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாகப் போலீஸ்காரர்களுக்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது.

இணைப்பு:

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பக்தோக்ரா என்கிற விமான நிலையம் 114 கிலோமீட்டர் தூரத்திலும், NJP என்று சொல்லப்படும் நியூ ஜய்பால்குரி (இதுவும் மேற்கு வங்காளமே) என்கிற ஊரின் புகைவண்டி நிலையம் 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சாலைமார்க்கமாக டார்ஜிலிங் 94 கிலோமீட்டர் தொலைவிலும், சிலிகுரி என்கிற ஊர் 114 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சிக்கிமில் புகைவண்டித் தடமோ, விமான நிலையமோ கிடையாது.

India Pakistan Wagah Attari Border Closing Ceremony

german wehrmacht military parade-1937

Friday 3 September 2010

ஆக்ஸ்போர்டு அகராதி இனி அச்சில் வெளிவராது என்று அதன் பதிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

தலையணை அளவில் இருக்கும் அகராதியின் பக்கங்களை புரட்ட யாருக்கு இப்போது நேரமிருக்கிறது. ஆன்லைனில் தட்டி அர்த்தம் பார்ப்பது அதிகரித்து விட்டதால், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு
அகராதி இனி அச்சில் வெளிவராது என்று அதன் பதிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆங்கில அகராதி என்றாலே ஆக்ஸ்போர்டை தேடு என்று கூறுமளவு பிரபலமானது, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பிரஸ் வெளியிடும் அகராதி. ஆரம்பத்தில் 60 கிலோ எடை வரை இருந்த தலையணை சைஸ் புத்தகம் அது. நாளடைவில் ஸ்லிம் ஆகி விட்டாலும், பாக்கெட் டிக்ஷனரி முதல் பல தொகுதிகள் வரை என ஆங்கில ஆராய்ச்சியாளர்களுக்கு கைகொடுத்து வருகிறது.


கால மாற்றத்துக்கு ஏற்ப, அந்த அகராதியும் டிஜிட்டல் வடிவமாக்கப்பட்டது. சந்தா கட்டி இன்டர்நெட்டில் பட்டனை தட்டி அர்த்தம் பார்த்துக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டது. இப்போது புத்தகம் புரட்டுவது குறைந்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பழியாக கிடப்பது பழகி விட்டதால், ஆன்லைன் ஆக்ஸ்போர்டு அகராதிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் அதை ஆன்லைனில் பார்ப்பதற்கு ஆண்டு கட்டணம் ஸி13,800. அதை மாதம்தோறும் பார்ப்பவர்கள் 20 லட்சம் பேர். இதனால், அதன் சமீபத்திய 20 புத்தக தொகுப்புகளை ஸி54,750 செலவழித்து வாங்குவோர் குறைந்து விட்டனர்.


உலகம் முழுவதும் 30,000 தொகுப்புகளே விற்பனையாகி உள்ளன. ஆக்ஸ்போர்டு அகராதி விற்பனை மளமளவென கடந்த சில ஆண்டுகளில் சரிந்து விட்டதால் அதை அச்சிடுவதை கைவிட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ் முடிவு செய்துள்ளது. இதுபற்றி அது நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆன்லைன் அகராதிக்கு அதிக ஆர்டர்கள் வருகிறது. மாறாக, அச்சு பதிப்பு விற்பனை குறைந்து விட்டது. எனவே, அடுத்த ஆண்டு முதல் அச்சிடுவது நிறுத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tuesday 31 August 2010

வினோத பழக்கங்கள்

பிரபலமான சிலருக்கு வினோத பழக்கங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.இதோ சில பிரபல வினோதங்கள்.

பிரபல விஞ்ஞானி ஜன்ஸ்டீன் குளிக்கும் போது குளியல் அறைக் கதவை தாழ் இடாமல்தான் குளிப்பார்.

துப்பறியும் தந்தை எனப் புகழப்படுபவர் எட்கார் ஆலன்போ.இவரது செல்லப்பறவை இவரது தோளின் மேல் அமர்ந்தபடி இருந்தால் தான் கதை எழுதும் ஆர்வம் அவருக்கு ஏற்படுமாம்.


நாத்தானியல் ஹாதார்ன் என்ற அமெரிக்க எழுத்தாளர் தன் மனைவியிடம் இருந்து கடிதம் வந்தால் முதலில் கையை நன்கு சுத்தமாக கழுவி விட்டுத்தான் கடிதத்தை பிரிப்பாராம் .

வில்லியம் மேக்விஸ் தாக்கரே எனும் எழுத்தாளர் ' வானிட்டி பேர் ' நாவல் மூலம் அகில உலகப் புகழ் பெற்றார்.இந்த நாவலை எந்த வீட்டிலிருந்து எழுதினாரோ அந்தவீ ட்டைக் கடக்கும் போதெல்லாம் தன் தொப்பியை எடுத்துவிட்டு அந்த வீட்டுக்கு தலை வணங்குவார்.

முதன் முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்த டாக்டர் சாமுவேல் ஜோன்சானுக்கு பார்வையாளர்கள் தொல்லைப் படுத்துவார்கள் என்ற பயம் எப்போதும் உண்டு.அதனால் அவர் எழுதும்போது மரத்தின் மேல் உட்கார்ந்து கொள்வாராம்.

நெப்போலியனை வெண்று உலகப் புகழ் பெற்ற வேசிண்டன் பிரபு நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்.அதனால் எப்போதும் தனது சட்டைப் பையில் ஆறு கடிகாரங்களை வைத்திருப்பாராம்.

புகைப்பட வினோதங்கள்









சில அறிவியல் வினோதங்கள்

Koalas
ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். 
Basenji
ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான்
Hagfish
 இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும்.

சீன வினோதங்கள்

























உலகின் அதி உயரமானவரும் அதி குள்ளமானவரும்

The world's tallest man, 8 ft 1 in (246.5 cm) Sultan Kosen, welcomes the shortest man in the world, 2 ft 5.37 in (74.61 cm) He Pingping, to his native Turkey

உலகின் மிக வினோத சைக்கிள் மாடல்கள்