Wednesday 18 August 2010

இந்தியா!

இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.

இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.

இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.

இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.

1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம்.

இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌‌ஜி. ஆ‌ண்டு 1906.

இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா.

இ‌ந்‌தியா பரு‌த்‌தி உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது.

இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா.

Tuesday 17 August 2010

காந்தி செய்த துரோகம்-2

ஒருக்கால், இர்வின் பிரபு கூறிய மாதிரி, மாநாட்டுக்குப் பிறகு தூக்குத்தண்டனை என்று வைத்திருந்தால், பெரிய குழப்பம் ஏற்பட்டு, காந்தி-இர்வின் ஒப்பந்தம் நிறைவேற, பகத்சிங்கின் தண்டனையைக் குறைப்பது ஒரு நிபந்தனையாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் காந்தியார் கூறியபடி, மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிடப்பட்டுவிட்டதால், வெறும் இரங்கல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி விட்டு, ஒப்பந்தததை மாநாடு ஏற்றுக் கொண்டுவிட்டது. பகத்சிங் கொல்லப்பட்ட மறு வாரமே, "குடியரசு" பத்திரிகையில் 'பகத்சிங்' என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கம் வெளியிட்டது. அந்தத் தலையங்கம் அன்றைய அரசியல் சூழ்நிலை பற்றியும், காந்தியைப் பற்றியும் பல கருத்துக்களை முன்வைக்கிறது. அத்தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:-



"அவர்கள் (காங்கிஸார்) சர்க்கார் தலைவரான மேன்மை தாங்கிய ராஜப் பிரதிநிதி திரு.இர்வின் பிரபு அவர்களைப் பாராட்டுவதும்,அவரிடம் பேசி முடிவு செய்து கொண்ட இர்வின் பிரபு , திரு.காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு மிகப் பெரிய வெற்றியாகக் கருதி, வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவோடு மாத்திரமில்லாமல்,திரு.காந்தி அவர்கள், திரு.இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி, அப்படியே அழைக்கும்படியாக, தேச மகா ஜனங்களுக்குக் கட்டளையிடுவதும், திரு,இர்வின் பிரபு அவர்கள், திரு.காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரக்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன."



ஆங்கிலேய அரசுக்கு எதிராக அஹிம்சை முறையில் போரிட்டு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவராம் காந்தி?! உண்மையை அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே!



உண்மையான வரலாற்றை மறைத்துவிட்டு,ஏதோ காந்திதாத்தா கடைக்குப் போய் மிட்டாய் வாங்கி வந்த மாதிரி, சுதந்திரம் பெற்ற கதையை,நம்மவர்களுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள்.



அனைவரைம் உண்மையை அறிந்து கொள்ளட்டும்.



"கத்தியின்றி,ரத்தமின்றி நாம் சுதந்திரம் பெற்றோம்" என்பது பொய். எனக்குத் தெரிந்த பொய்களிலெ இதுதான் மிகப்பெரிய பொய்.



எந்த தேசமும் ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றதில்லை.இந்தியாவும் அப்படித்தான் என்பதை எல்லோருக்கும் உரத்துச் சொல்லுகிறேன். இந்திய விடுதலைப் போரில்,புரட்சிகர இயக்கங்களுக்கு மிக அரியதும், நெடியதுமான ஒரு வரலாறு உண்டு. இவ்வியக்கங்களின் 90 ஆண்டுகால வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டது.



ஜாலியன்வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த ஆங்கில அதிகாரி ஜெனரல் டயரை இந்திய மக்களில் பெரும்பாலோர் அறிவர். ஆனால்,அந்தக் கொடுங்கோலனைப் பழி வாங்குவதற்காக,இங்கிலாந்துக்கே சென்று,21 ஆண்டுகள் தன் வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் துறந்து,கொண்ட குறிக்கோள் ஒன்றையே மனதில் கொண்டு,தலைமறைவாய் வாழ்ந்து,பின் 1940-ஆம் ஆண்டு தான் நினைத்தையே முடித்தானே உத்தம்சிங். அவனை நம் மக்கள் பலருக்குத் தெரியாது. இப்படி,கொடுங்கோலர்களை அறிந்தவராகவும், நம் தியாகிகளை மறந்தவராகவும் வாழும் அவமானம் நம்மவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அகிம்சையின் மூலமாக மட்டுமே சுதந்திரம் பெற்றோம் என்ற பொய்யான பிரச்சாரமே, மேற்காணும் இழிநிலைக்குக் காரணம் என்பதை இனியேனும் நம்மவர்கள் உணர்வார்களாக.

காந்தி செய்த துரோகம்

ஒரு ரசிகனின் மனோபாவத்தோடும்,ஒரு பக்தனின் நம்பிக்கையோடும் புனையப்பட்ட வரலாறுகள் நம்முன்னே குவிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதோ,ஓர் ஆராய்ச்சியாளனின் சிரத்தையோடும் நேர்மையோடும் அளிக்கப்படும் வரலாற்று சான்றுகள். தனது வாழ்நாள் முழுவதும் தேச மக்களுக்கும், புரட்சிகர இயக்கங்களுக்கும் காங்கிரசும், காந்தியும் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல.இந்த காந்தியையே 'மகாத்மா' என்றும் 'தேசத்தந்தை' என்றும் இந்தியப் பூர்ஷுவாக்கள் நம் தோளிலே தூக்கி வைக்கிறார்கள்.
1885-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் நாள், பம்பாய் நகரத்தில், கோகுல்தாஸ் தாஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில், வங்கத்தைச் சேர்ந்த உமேஷ் சந்திர பானார்ஜியின் தலைமையில், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முதல் மாநாடு நடந்தது. 'காங்கிரஸின் தந்தை' எனப்பெயர் பெற்ற ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்னும் ஆங்கிலேய அதிகாரி தான் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர். "படிப்பறிவு கொண்ட பிரிட்டிஷ் விசுவாசிகளை" அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒன்று திரட்டுவதே காங்கிரஸை உருவாக்குவதே அவருடைய நோக்கமாக இருந்தது. அவரே, தொடர்ந்து 20 வருடங்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அவரது எண்ணத்திற்கேற்பவே, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் மிகுந்த 'ராஜ விசுவாசம்' உடையவர்களாக விளங்கினர்.1886-ஆம் ஆண்டு கல்கத்தாவில்( இன்றைய கோல்கத்தாவில்) நடைப்பெற்ற 2-வது காங்கிரஸ் மாநாட்டின் முதல் தீர்மானத்தை அதற்கு ஒரு எடுத்துக் காட்டாக நாம் கொள்ளலாம். அத்தீர்மானவது:-



"மஹாராணியின் அனுகூலமான என்றும் மறப்பர்கரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் 50 வருஷம் முடிவுபெற்றதைக் குறித்துச் சக்கவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரததேசத்தின் எல்லாப் பகுதிகளினிறும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல பல வருஷம் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது."



மஹாராணியார் பல பல வருஷம் வாழவேண்டுமெண்று கூட இல்லை,பல பல வருஷம் நம்மை ஆள வேண்டுமென்றே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஆங்கிலேயர்களை வெகுவாக மகிழ்வித்து இருக்கும். ஆக, இந்திய விடுதலையை மனதில் கொண்டு, உருவாக்கப்பட்ட இயக்கமன்று காங்கிரஸ் கட்சி என்பது தெளிவாகிறது. கலப்படமற்ற ராஜவிசுவாசத்திலிருந்து, தங்களின் தேச மக்கள் தேவைகளுக்காக அரசாங்கத்திடம் மனுப்போடும் அடுத்த கட்டத்திற்கு காங்கிரஸ் வந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வலதுசாரித் தீவரவாதி தலைவர்களான திலகர், வ.உ.சி.,அரவிந்தர் முதலானோரால், காங்கிரஸ் கட்சியில் புதிய ஒளி கூடியது. 1917 -ஆம் ஆண்டு சம்ப்ரான் சத்தியாகிரகத்திற்குப் பிறகு, காந்தியின் தலைமையில்,அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் முதலான போராட்டங்கள் நடைப்பெற்றன.



இறுதியாக 1942-ல் "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்தோடு தொடங்கிய கடைசிப் போரில், காங்கிரஸ் தொண்டர்கள் பலரும், அஹிம்சையில் நம்பிக்கையிழந்து, காந்தியின் பிடியிலிருந்து நழுவி, வன்முறைச் செயல்களில் இறங்கினர். இவ்வாறு இந்திய மக்கள் புரட்சிகர நடவடிக்கைகளில் நாட்டம் கொள்ளத் தொடங்கியுள்ளமையை நன்கு அறிந்து கொண்டதாலும், இரண்டாம் உலகப்போரில் தனக்கேற்ப்பட்ட பொருளாதார நெருக்கடிகளினாலும், இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் தள்ளப்பட்டது.1947 ல் இந்தியாவிற்கு அரசியல் விடுதலை கிடைத்தது. மேற்காணும், சுருக்கமான காங்கிரஸ் வரலாற்றில் எவ்வாறு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதை மட்டும் தெளிவாக அறிந்துகொள்ள இயலுகிறது.



புரட்சிகர இளைஞர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கை விடுவதிலும், காங்கிரஸ் மாநாடுகளில் அவர்களைக் கண்டிக்கும் தீர்மானங்களை முன்மொழிவதிலும் மட்டுமே காந்தியார் மிகக் கவனமாக இருந்தார், எங்கே மக்களுக்கு உண்மை தெரிந்துவிடுமோயென்று! பகத்சிங்கைத் தூக்கிலிடத் தூண்டியதும், அதற்குத் தேதி குறித்ததும் காந்தியே என்பது, காந்தி-இர்வின் சந்திப்புகள், ஒப்பந்தங்கள், கடிதங்கள் மூலம் இங்கே நிருபிக்கப்பட உள்ளது.



தளர்ந்த போன காந்தியின் அஹிம்சை பற்றியும்,புரட்சி இயக்கத்தின் தேவை பற்றியும் சசிந்திரநாத் சன்யால் (இவர்,முதல் உலகப் போருக்கு முன்பாகவே புரட்சி நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்:ராஷ் பிகாரி கோஷின் வலக்காரமாக விளங்கியவர்.) காந்தியாருக்கு எழுதிய கடிதம் வரலாற்றுப் புகழ்மிக்கது.அக்கடிதத்தின் முக்கியத்துவம் கருதி, சில பகுதிகள், கீழே தரப்படுகின்றன உங்களுக்காக.



"தங்களது சோதனைக்கு ஓர் ஆண்டு தேவை என்றீர்கள்.ஆனால் நான்கு முழு ஆண்டுகளுக்குத் தங்களது சோதனை நீண்டது.போதுமான அளவுக்கு முயன்று பார்க்கப்படவில்லை என்று தாங்கள் இன்னுமா சாதிக்க முயல்கிறீர்கள்? உண்மையில் தங்கள் திட்டம் தோற்றுத் தான் போய்விட்டது.ஆனால் அது இந்திய மக்களால் நேர்ந்ததன்று".



"தங்களிடம் தொலை நோக்கு என்பதே கிடையாது.ஒரு பலவீனமான வழக்குக்கு தாங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்". "நீங்கள் புரட்சியாளர்களை இரக்கமற்ற முறையில் விமர்சிக்கிறீர்கள்". உங்கள் கொள்கைகளிருந்தும், வழிமுறைகளிருந்தும் மாறுபட்டமைக்காக அவர்களைத் 'தேசத்தின் எதிரிகள்' என்று சொல்லும் அளவுக்குப் போயிருக்கிறீர்கள். புரட்சியாளர்கள் தங்கள் தாயகத்திற்காக அனைத்தையும் இழந்தவர்கள் .அவர்களுக்கு உங்களால் உதவமுடியாவிட்டாலும், குறைந்தது அவர்களிடம் கொடுமையைக் காட்டமலாவது இருங்களேன்".



இக்கடிதம் பல இளைஞர்களின் உணர்ச்சிகளையும், மனத்தாங்கலையும் பிரதிபலித்தது என்றே கூறவேண்டும். உண்மையும் அதுதான்.



காந்தியின் செல்வாக்கு,ஆங்கிலேயர்களை அடக்குவதைக் காட்டிலும், புரட்சியாளர்களின் வீரியத்தைக் குறைக்கவே மிகுதியும் பயன்பட்டது.



அஹிம்சை வழியில் போராடினால், 1921-ஆம் ஆண்டிற்குள் இந்தியா சுதந்திரமடைந்துவிடும் (India would be free by the midnight of December 31,1921) என்ற காந்தியின் வாக்கு பொய்த்துப் போனபின், 1922-ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, இந்த மண்ணின் இளைஞர்களுக்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஓர் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.



புதிதாகப் புறப்பட்ட இந்தப் புயலில் இருந்துதான் பல நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள் புறப்பட்டுவந்தனர். இவர்களை உருவாக்கிய அந்தப் புயல்,உத்திரபிர்தேசம், கோரக்பூர் மாவட்டத்தில், சௌரி சௌரா என்னுமிடத்தில் மையம் கொண்டிருந்தது.



பலரைச் சுட்டுக் கொன்றும், மிகப்பலரை அடித்து வீழ்த்தியும், காயப்படுத்தியும் வெறியாட்டம் நடத்திய சௌரி சௌரா போலிசாரின் அட்டூழியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள்,குனிந்த தலை நிமிர்ந்தனர். உயிருக்குப் பயந்து ஓடிய 21 போலிசாரையும், காவல் நிலையத்திற்குள் வைத்து உயிரோடு கொளுத்திவிட்டனர்.



செய்தியறிந்த காந்தியார்,நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தை உடனே நிறுத்தும்படி உத்தரவிட்டார். யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. தான் இமாலயத் தவறு செய்துவிட்டதாக அறிக்கை விட்டார்.முடிவைக் காட்டிலும்,முறையே முக்கியமானது (Means not end) என்று தான் கருதுவதால், எக்காரணம் கொண்டும், எந்த நியாத்திற்காகவும், தன்னால் ஹிம்சையை ஆதரிக்க முடியாது என்று கூறினார்.



ஆனால், இதே காந்தியார்,முதல் உலகப்போரில், பென்லாண்ட் பிரபு,வெலிங்டன் பிரபு, ஜேம்ஸ் மெஸ்டன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குக் கூடத் தன்னாலியன்றவைகளைச் செய்துள்ளார் என்பது நாமறிந்த வரலாறேயாகும். வெள்ளைக்காரக் கவர்னர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டு,உலகப்போரில் தன்னையும், நாட்டு மக்களையும் பிணைத்துக் கொண்டது மட்டும் எவ்வாறு அஹிம்சையாகும்? போர் என்றாலே ஹிம்சைதான் என்று காந்தியாருக்குத் தெரியாத என்ன?





காந்தி-இர்வின் ஒப்பந்தத்தால் விளைந்த மற்றெந்தக் கேட்டினையும் விட மிகப்பெரியது, பகத்சிங்கும் அவர் தோழர்களும் தூக்கிலிடப்பட்ட சம்பவமே ஆகும். ஆம். இவ்வொப்பந்தத்திற்கும், பகத்சிங்கின் மரண தண்டனைக்கும் நேரிடையாகவே தொடர்பிருந்தமை இங்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்த மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு,சி.ஆர். தாஸ் முதலான காங்கிரசு தலைவர்களே கூட, காந்தியாரின் இச்செய்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. நேரு அவர்கள், சிறையிலிருந்தபடியே ஓர் அறிக்கை வெளியிட்டார்:-

"இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில்,மக்கள் அடக்குமுறை தாளாமல், பலாத்காரத்தை உபயோகித்துவிட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப் போரையே ஒத்தி வைப்பதா? ஆம் என்றால், காந்திஜி கூறும் அஹிம்சைக் கொள்கைகளில், எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது".................................................................



இந்தியா முழுவதும் ,எந்த ஒரு இடத்திலும், வன்முறைச் சம்பவமே நடக்காது என்று உத்தரவாதம் ஏற்பட்டால்தான் இயக்கத்தைத் தொடர முடியும் என்று காந்திஜி கருதுவாரானால், அவரது இயக்கமும் சரி, அஹிம்சைப் போராட்டமும் சரி,ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வெற்றிபெறப் போவதில்லை. ஒரு அடிமை நாட்டு மக்களிடமிருந்து, அடக்கப்பட்ட,ஒடிக்கப்பட்ட மக்களிடமிருந்து, அப்படிப்பட்ட உத்தரவாதத்தைப் பெற எவராலும் முடியாது".



நேருவின் இந்த அறிக்கை, அனைத்து காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கருத்தாக இருந்தது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை- உதம் சிங்

ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற ஒன்றை நமது சமூக அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம். கி.பி 1919 ஆம் ஆண்டு ஏபரல் 13 ல் மருத்துவர்கள் சத்யா பால், சய்புதீன் கிட்ச்லாவின் கைதைக் கண்டித்தும், பிரித்தானிய அரசுக்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் பூங்கா என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். தீவிரமான சுதந்திர போராட்ட செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞரான உதம்சிங் அப்போது மக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியிலிருந்தார்.



அந்நேரத்தில் 90 ராணுவ வீரர்கள் ஜெனரல் டயர் என்னும் அதிகாரியின் தலைமையில் அங்கே குழுமியிருந்தனர். சரியாக மாலை 5 15 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எந்தவித எச்சரிக்கையுமின்றி மக்களை நோக்கி சுட்டு வீழ்த்த டயர் கட்டளையிட்டான். பத்து நிமிடங்கள் சரசரவென பாய்ந்த குண்டுகள் ஆயிரக்கணக்கானவர்களின் உடல்களை துளைக்க ஆரம்பித்தது. வெளியே செல்ல ஒரே வழியைக் கொண்டிருந்த பூங்காவினால் மக்களால் எளிதில் வெளியேற முடியவில்லை. பூங்காவின் சுவர்களிலும், கிணறுகளிலும் உயிரைக் காப்பாற்ற குதித்து தப்பிக்க முயன்றனர்.



இப்படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டார்கள், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம்பட்டார்கள். இப்படுகொலையில் தப்பித்த எண்ணற்றவர்களில் உதம்சிங்கும் ஒருவர். இதில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் கருதப்படுகிறது. பிரித்தானியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காகவும், போராட்டம் நடத்தும் மக்களுக்கு பாடம் கொடுத்து எச்சரிக்கவும் இப்படுகொலைக்கு முக்கிய காரணியாக பஞ்சாபின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் என்பவரே ஆவர்.

இந்நிகழ்வு உதம்சிங்கை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி தனது வாழ்வின் திருப்புமுனையாக ஏற்படுத்தியது. அதன் விளைவாக தனக்குள் அமைதியான உறுதிமொழியை மேற்கொண்டு படுகொலைகளுக்கு காரணமாய் இருந்த கவர்னரை கொலை செய்து உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பிக்க சபதம் எடுத்தார்.



அந்நேரத்தில் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் மாற்றாலாகி விட்டிருந்தார்.

பல்வேறான பெயர்களில் பல நாடுகளுக்கு பயணித்து மைக்கேல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். 1920 ல் ஆப்பிரிக்கா சென்றார், பின் 1921 ல் நய்ரோபி சென்றார். அமெரிக்கா சென்றும் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியுற்றார். விடுதலைக்கான புரட்சியில் அமெரிக்காவில் மூன்று வருடங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் பணியாற்றினார். கி.பி 1927 ல் இந்தியா திரும்பினார். பின்னர் லைசென்ஸ் இல்லாத ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் வைத்திருந்த காரணத்திற்காக 1921 ல் கைதானார். இவ்விசாரணையில் 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1931 ல் விடுதலை செய்யப்பட்ட உதம்சிங் பஞ்சாப் சென்று பெயிண்ட்டராக வேலை செய்து கொண்டே புரட்சிக்கான பணிகளிலும் கவனம் செலுத்தினார். அத்துடன் டயரை கொலை செய்யும் தனது முயற்சியையும் கைவிடவில்லை. 1933 ல் காஷ்மீர் சென்ற உதம்சிங் போலி வேடம் பூண்டு ஏமாற்றி ஜெர்மனிக்குச் சென்றார். 1934 ல் லண்டனை அடைந்த சிங் 9 அட்லர் ஸ்டிரீட், கமெர்சியல் ரோடு ல் வீடு எடுத்து தங்கினார். தனக்கென தனியாக கார் வாங்கி தனது பயணத்துக்கு உபயோகித்துக் கொண்டார். டயரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட மைக்கேல் நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் சரியான வாய்ப்புக்காகவும் உலகமனைத்திற்கும் கொண்டு செல்லும் வாய்ப்புக்காகவும் காத்திருந்தார்.



கடைசியாக அந்த வாய்ப்பு 21 வருடங்கள் கழித்து 1940 ஆம் வருடம் மார்ச் 13 ம் நாளில் வந்தது. கிழக்கு இந்திய சங்கமும், ராயல் செண்ட்ரல் ஆசியன் சொஸைட்டியும் இணைந்து காக்ஸ்டன் ஹாலில் நடத்திய சந்திப்பிற்கு மைக்கேல் ஓ’டயர் பேச்சாளராக வந்திருந்தார். தனது புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியுடன் காக்ஸ்டன் ஹாலுக்கு நுழைந்தார். சந்திப்பு முடிந்ததும் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்றனர், அந்நேரத்தில் மற்றொருவருடன் பேசுவதற்காக நகர்ந்த மைக்கேல் டயரை நோக்கி சிங் இரண்டு முறை சுட்டார். மைக்கேல் டயர் அந்த இடத்திலேயே இறந்தார். அத்துடன் இந்தியாவின் செய்லாளராக இருந்த லார்ட் செட்லாண்டையும், சர் லூயிஸ் டேனையும், லார்ட் லாமிங்டனையும் சுட்டார். இவர்களனைவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். தனது பணியை முடித்த சிங் தப்பிக்க முயலவில்லை. பின் அங்கேயிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.



இந்த வீரச்செயலைக் கேள்விப்பட்ட இந்திய பொது ஜனங்கள் உதம்சிங்கை ஒரு கதாநாயகனாக பார்த்தனர். சிங்கின் செயலுக்கு மிகுந்த மரியாதையையும், பிரித்தானிய அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற முடிவையும் மக்கள் மனங்களில் கொண்டு வந்தது. இந்நிகழ்வு 1942 ல் மகாத்மா காந்தி நடத்திய வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கும், 1947ல் கிடைத்த சுதந்திரத்திற்கும் அடிப்படைக் காரணமாய் அமைந்திருந்தது.



இந்நிகழ்வினைக் கண்டித்த மகாத்மா காந்தி பின்வருமாறு பத்திரிகைக்கு எழுதினார்.

 
”the outrage has caused me deep pain. I regard it as an act of insanity...I hope this will not be allowed to affect political judgement"”
 

ஒரு வாரத்திற்கு பிறகு தனது பதிப்பான “ஹரிஜன்” பத்திரிக்கையில் பின்வருமாறு எழுதினார்.



"We had our differences with Michael O'Dwyer but that should not prevent us from being grieved over his assassination. We have our grievances against Lord Zetland. We must fight his reactionary policies, but there should be no malice or vindictiveness in our resistance. The accused is intoxicated with thought of bravery"



ஜவஹர்லால் நேரு தனது நேஷனல் ஹெரால்டுவில் பின்வருமாறு எழுதினார்.

 
"Assassination is regretted but it is earnestly hoped that it will not have far-reaching repercussions on political future of India. We have not been unaware of the trend of the feeling of non-violence, particularly among the younger section of Indians. Situation in India demands immediate handling to avoid further deterioration and we would warn the Government that even Gandhi's refusal to start civil disobedience instead of being God-send may lead to adoption of desperate measures by the youth of the country"



சுபாஷ் சந்திரபோஸ் மட்டுமே உதம்சிங்கின் செயலை பகிரங்கமாக வரவேற்று பேசினார்.



மக்களின் மனதில் பெரும் மகிழ்வை ஏற்படுத்திய இந்நிகழ்வுகள் மக்களை பழிக்குப் பழிவாங்கியாயிற்று என அமைதிப்படுத்தியதுடன் உதம்சிங்கை தமது கதாநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். அத்துடன் உலக ஊடகங்கள் பலவும் ஜாலியன் வாலாபாக் கதையினை தெரிந்து கொண்டன. அத்துடன் டயரின் பங்கையும் தெளிவு படுத்தின. சிங்கை ஒரு விடுதலைப் போராட்ட வீரனாகவும், பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட மக்களின் எதிர்விளைவாகவும் லண்டனின் டைம்ஸ் பத்திரிக்கை அங்கீகரித்தது. டயர் இலண்டனில் தான் கொலை செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் வானொலி ”மக்களின் அழுகுரல் துப்பாக்கி தோட்டாக்களாக பேசியது” என தொடர்ந்து ஒளிபரப்பினர்.



இதனிடையே கொலைக்கான விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு “நான் தான் கொலை செய்தேன், ஏனெனில் அவர் மேல் எனக்கு ஏற்பட்ட வன்மத்திற்கு பழிவாங்கினேன். மற்றும் கொலையாவதற்கு தகுதியானவர் தான்” என பகிரங்கமாக ஒத்துக் கொண்டார்.



விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1940 ஜூலை 31ல் தூக்கிலிடப்பட்டார். மற்ற கைதிகளைப் போல சிறைக்குள்ளாக அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் புதைக்கப்பட்டார். 1940 மார்ச்சில் நடந்த இப்படுகொலையைக் கண்டித்த இந்திய காங்கிரஸ் தலைவர்களில், 1962ல் ஜவஹர்லால் நேரு ”டெய்லி பிரதாப்” ல் “தூக்கு கயிற்றிற்கு முத்தம் கொடுத்த உயிர் நீத்த ஷாஹீத்-ஐ-அஸாம் உதம் சிங்கிற்கு எனது வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறேன்” என புகழாராம் சூட்டினார்.



இதன் பின்னர் ஜூலை 1974ல் சுல்தான் லோதியின் எம்.எல்.ஏ சாது சிங் தின்னின் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளின் பேரில் இந்திரா காந்தி பிரித்தானிய அரசிடம் உதம் சிங்கின் உடலை ஒப்படைக்க கோரினார். உதம் சிங்கின் உடலைக் கொண்டு வர சாது சிங்கே இங்கிலாந்து சென்று உதம் சிங்கின் உடலைப் பெற்று வந்தார். தில்லி விமான தளத்தில் இறங்கிய சிங்கின் உடலை சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதலமைச்சர் ஜெய்ல் சிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவர்களுடன் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் சென்று மரியாதை செய்து பஞ்சாபிலுள்ள சுனம் என்னும் உதம்சிங்கின் பிறந்த ஊரில் எரிக்கப்பட்டார். அவரை எரித்தபின் அவருடைய சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

பகத்சிங்கை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் உதம் சிங்கை நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்

இடம்: ஜாலியன் வாலாபாக்

காரணம்: மக்களை ஒடுக்குவதற்காக

பொறுப்பாளர்: மைக்கேல் ஓ டயர், பஞ்சாப் கவர்னர்



விளைவு : 400க்கு அதிகமானோர் பலி

1000க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

கற்பழிப்புகள் : இல்லை





இந்தியனாய் தனது தேசத்தில் நடைபெற்ற ஒரு படுகொலைக்கு பழிவாங்க திட்டமிட்டு 21 வருடம் காத்திருந்து கொலைகளுக்கு காரணமானவரை இந்தியன் ஒருவர் அவருடைய நாடுக்கே சென்று பழிவாங்கியிருக்கிறார். அவர் இந்தியர்களால் ஒரு தியாகியாகவும், சுதந்திர போராட்ட வீரராக மக்களாலும், தலைவர்களாலும் போற்றப்படுகிறார்.

உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்

அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது.தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு.

கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும் வளம்குறைந்த மண்ணிலும் வளரக்கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும் தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள் சிகப்பு இளஞ்சிவப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.

வறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.

ஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு வாந்தி கடுமையான வயிற்றுவலி நினைவிழப்பு மயக்கம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

ஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும் வயிற்றை காலிசெய்வதும் செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

சில தகவல்கள்

சில  தகவல்கள்

 1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு     சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
 நீண்ட வார்த்தை 'Stewardesses"     

5. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான   "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. உலகில் மனிதர்கள்  அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

11.  தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

 

வனுவாட்டு

வனுவாட்டு

இத்தீவுகள் 1606இல் போர்த்துகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1774இல் பிரிட்டிஷ்காரரான ஜேம்ஸ் குக் இந்தத் தீவுக் கூட்டங்களை ஆய்வு செய்து பெயர் சூட்டினார். நியூ ஹெப்ரைட்கள் எனும் பெயரைத் தீவுக் கூட்டத்திற்கு வைத்தார். 1906 முதல் பிரிட்டனும் பிரான்சும் கூட்டாக ஆண்டன. இரண்டாம் உலகப் போரின் போது போர்த்தளமாக இத்தீவுகள் பெருமளவில் பயன்பட்டன. நேசநாடுகள் பயன்படுத்திக் கொண்டன. 1980இல் விடுதலை அளிக்கப்பட்டது. வனுவாட்டு எனப் புதுப் பெயர் இட்டுக் கொண்டனர்.

ஓசியானியா பகுதியில், தென் பசிபிக் கடலில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதிக்கு வட கிழக்கே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 12 ஆயிரத்து 200 சதுர கி.மீ. மலைகளும் எரிமலைகளும் நிறைந்த நாடு. மக்கள் தொகை 2 லட்சத்து 10 ஆயிரம். கிறித்துவத்தின் எல்லாப் பிரிவுகளையும் மக்கள் பின்பற்றுகின்றனர். 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகளை 73 விழுக்காடு மக்கள் பேசுகின்றனர். 53 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

30.-7.-1980இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளு மன்றக் குடியரசு நாடு. நாட்டில் இருப்புப் பாதையே கிடையாது.

வாடிகன் நகரம்

வாடிகன் நகர அரசு ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான கி.மீ. பரப்புள்ள நாடு சிறுத்து இன்று எஞ்சியிருக்கும் போப் சாம்ராஜ்யத்தின் அளவு 0.44 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரம் மட்டுமே. 19ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டை ஒன்றுபடுத்தும் இயக்கம் நடந்தபோது போப் அரசின் பெரும்பகுதி நாட்டுடன் சேர்க்கப்பட்டது. பரமண்டல சாம்ராஜ்யம் இருக்கும்போது நர (மக்கள்) மண்டல சாம்ராஜ்யம் எதற்கு என எடுத்துக் கொண்டார்கள் போலும்!

1929இல் ஏற்பட்ட லாட்டரன் ஒப்பந்தப்படி வாடிகன் நகரம் மட்டுமே தனி அரசு என ஆக்கப்பட்டது.
ரோம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் வாடிகன் நகரம் அரை சதுர கி.மீட்டருக்கும் குறைவான பரப்புள்ளது. 2006இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 932 பேர்கள் வசிக்கின்றனர். போப்பும் அவர் பரிவாரங்களும் இவர்கள். அனைவரும் ரோமன் கத்தோலிக்கர்.
இத்தாலி, லத்தீன், பிரெஞ்ச் முதலிய பல மொழி பேசுகிறவர்கள். அனைவரும் படித்தவர்கள்.இதற்கும் கூட ஒரு சுதந்திர நாள் உண்டு. 11-.2.-1929 நாட்டின் தலைவர் போப். அரசின் தலைவர் மற்றொரு கார்டினல். யூரோ நாணயத்தை இந்நாடும் ஏற்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் அளிக்கும் சிறப்பு வசூல் தொகைதான் இந்நாட்டின் பொருளாதாரம். பீட்டரின் பென்ஸ் என்ற பெயரில் இத்தொகை வசூல் செய்யப்படுகிறது. பீட்டர் என்பவர்தான் முதல் போப். இது தவிர, கண்காட்சி, நுழைவுக் கட்டணம், தபால் தலை விற்பனை, மெடல்கள், நாணயங்கள், நினைவுப் பொருள்கள், நூல்கள் விற்பனை, கட்டட வாடகை போன்ற வழிகளிலும் வருமானம் வருகிறது.

இந்த நாட்டில் 860 மீட்டர் நீளத்திற்கான ரயில் பாதை உண்டு. இந்த நாட்டுக்கெனத் தனியே இணைய தளக்குறியீடு உண்டு. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைப் பேசிகள் உண்டு.