Tuesday 1 March 2011

அமெரிக்காவில் இறந்தவர் மேயராக தேர்ந்து எடுக்கப்பட்ட வினோதம்

அமெரிக்காவில் டென்னசி மாநிலத்தில் உள்ளது ட்ரேசி சிட்டி. 1,652 பேர் மட்டும் வசிக்கும் இந்த நகரில் மேயர் தேர்தல் நடந்தது. இதில் இப்போதைய மேயர் பார்பரா ப்ராக்கை எதிர்த்து கேரி கியரி உள்பட 3 பேர் போட்டியிட்டனர். அவர் கடந்த மாதம் மாரடைப்பால் கேரி கியரி மரணம் அடைந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு அவர் மரணம் அடைந்ததால், ஓட்டுச்சீட்டில் அவர் பெயர் நீக்கப்படவில்லை.

தேர்தல் நடந்தது. வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர்கள் கேரி கியரிக்கு ஓட்டுப்போட்டு அவரை மேயராக தேர்ந்து எடுத்து இருந்தனர். அவர் 2-வது இடம் பெற்றவரை விட அவர் 3 மடங்கு ஓட்டுக்கள் அதிகம் பெற்று இருந்தார். இதுகுறித்து அவரது மனைவி சூசன் கூறுகையில், இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. அவர் மரணம் அடைந்த அன்று அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள், அவர் இறந்து விட்டால் என்ன நாங்கள் அவருக்கு தான் ஓட்டுப்போடுவோம் என்று கூறினார்கள் என்று தெரிவித்தார்.

கியரி மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 55. அவர் இறந்து விட்டார் என்பது எங்களுக்கு தெரியும். இப்போதைய மேயர் பார்பராவை எதிர்த்து தான் நாங்கள் இறந்து போன கியரிக்கு ஓட்டுப்போட்டோம் என்று அந்த நகரவாசி கிறிஸ் ரோஜர்ஸ் தெரிவித்தார். இப்போதைய மேயர் பார்பரா கூறுகையில், இறந்து போன ஒருவருக்கு ஒட்டுப்போட்டு ஜெயிக்க வைத்து இருப்பது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்று குறிப்பிட்டார். இறந்துபோன ஒருவரை தேர்ந்து எடுத்ததால், மேயர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு கவுன்சிலர்கள் ஓட்டுப்போட்டு தங்களில் ஒருவரை தேர்ந்து எடுத்து மேயராக பதவியில் அமர்த்துவார்கள்.