Tuesday, 31 August 2010

அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி

 

கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்.  உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ட்விங்கிள் திவிவேதி. 13 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

 

இந்த சிறுமி அழ ஆரம்பித்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்கு பதில் ரத்தம் வடிகிறது. அதுமட்டு மல்லாமல் கை, கால், தலை என உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து ரத்தம் வடிகிறது.

 

இந்த பிரச்னையால் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாமல் உள்ளார்.  ஏற்கனவே படித்து வந்த பள்ளி நிர்வாகம் வெளியில் அனுப்பி விட்ட நிலையில் வேறு பள்ளியிலும் சேர்க்க மறுக்கின்றனர்.