Tuesday 1 March 2011

இந்தியச் சிறுவனுக்கு நெஞ்சில் கால்



இந்தியாவின் Buxar, Bihar என்ற இடத்தில் வாழும் 8வயது நிரம்பிய தீபக் குமார் பஸவான் என்ற சிறுவனுக்கே இந்த விசித்திரமான உடல் காணப்படுகிறது.

சிறுவனின் நெஞ்சுப்பகுதியில் இருந்து மேலதிகமாக இரு கால்கள் வெளியே வந்து காணப்படுகிறது. அதனுடன் சிறியதாக இரு கைகளும் காணப்படுவது இன்னும் அதிர்ச்சியை தோற்றுவிக்கின்றது.

நெஞ்சில் காணப்படும் மேலதிகமான அந்த உடல் சிறுவன் நடக்கின்ற போழுதெல்லாம் பெரும் சுமையை தோற்றுவிக்கின்றது.

இந்த சிறுவனின் இந்நிலமை தொடர்பில் வைத்திய ரீதியாக அதனை அகற்ற பெற்றோர் பெரும் விருப்பப்பட்ட போதிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அது எட்டாக்கனியாகவே காணப்படுகிறது.

நாளாந்த வருமானமாக வெறும் 200ரூபாய்கள் மட்டுமே பெறக்கூடிய எம்மால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் மேலதிக உடலை அகற்ற எவ்வாறு வைத்தியரை நாடுவது என கவலை தெரிவித்துள்ளனர்.