Sunday 8 August 2010

வடுவூர் துரைசாமி அய்யங்கார் (1880-1942)

 வடுவூரில் 1880-இல் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
    1919 முதல் சிலகாலம் மனோரஞ்சனி என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தி, அதில் தம் நாவல்களைத் தொடராகவும் வெளியிட்டார்.
    ஏறத்தாழ 40 நாவல்களை எழுதியுள்ளார். மேனகா, திகம்பர     சாமியார்     முதலான     நாவல்கள் திரைப்படமாகியுள்ளன.
    வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்கள் உணர்ச்சிக் கிளர்ச்சியூட்டும்     தன்மையுடையனவாகவும், அறிவுப்புதிர் கொண்டனவாகவும் அமைந்திருந்தன.
    டாக்டர், சோணாசலம், நங்கை மடவன்னம், பாவாடைச் சாமியார், பச்சைக்கிளி, மருங்காபுரி மாயக்கொலை, மாய விநோதப் பரதேசி என்பன இவரின் நாவல்களில் சிலவாகும்.