Thursday 5 August 2010

ரூசோ (ஜான் ஜாக் ரூசோ - Jean-Jacques Rousseau)

“சுதந்திரம்”, “சமத்துவம்”, “சகோதரத்துவம்” என்ற தாரக மந்திரங்களை ஒரு எழுத்தாளன்தான் தன் படைப்புகளின் வழியாக உலக மக்களுக்கு விட்டுச்சென்ற
பிரெஞ்சு மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார்
இந்தச் சிந்தனை மக்களை எழுச்சி கொள்ளச் செய்ததுடன், ஒரு புரட்சிக்கும் வித்திட்டது. அதுதான் பிரெஞ்சுப் புரட்சி!

வாழும்போது வறுமையோடு போராடினான்; எழுத்துக்களால் இறுதிக் காலத்தில் ஓரளவு பேசப்பட்டான்; மறைந்த போது சராசரி மனிதனாகக் கருதப்பட்டு, சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டான்.

ஆனால் அவன் மறைந்து பதினாறு ஆண்டுகள் முடிந்த பின், அந்த எழுத்தாளனுக்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்தது. புதைக்கப்பட்ட அவன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மீண்டும் அலங்கரிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்க, பிரபுக்களை மட்டுமே புதைக்கப்படும் மயானத்தில் அவன் சடலம் புதைக்கப்பட்டது. உலக எழுத்தாளர்களில் இவனுக்கு மட்டுமே இந்தச் சிறப்புக் கிடைத்தது.

அவன் பெயர் ஜான் ஜாக் ரூசோ.

பிறப்பு ஜூன் 28 1712 (ஜெனீவா, சுவிட்சர்லாந்து)
இறப்பு ஜூலை 2 1778 (அகவை 66) (எர்மனன்வில்லீ, France)

ரூசோவின் தந்தை ஐசக் ரூசோ, தாய சூசான் பெர்னாட்.

இவர் பிறந்து ஒன்பதாவது நாளிலேயே இவரது தாயார் பிரசவக் கோளாறினால் இறந்துவிட்டார். கைக்கடிகார உற்பத்தியாளரான இவரது தந்தை: இங்கிலாந்து படைத்தளபதி ஒருவருக்கும், ரூஸோவின் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் சிறை செல்ல வேண்டியதிருக்கும் என்பதை அறிந்த ரூஸோவின் தந்தை 1722 இல் நாட்டை விட்டு ஓடினார்.